NEWS

BJR Christian Media

நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம். கலாத்தியர் 6 9.

Thanks to Jeevitha Mary.

நீங்கள் இன்று செய்யும் நண்மையான காரியங்கள் நாளை மறக்கப்படலாம். எனினும் நன்மையையே செய்யுங்கள்.

தேவன் உங்களை வெற்றியாளாராக பார்க்கவில்லை. நீங்கள் அவருக்கு விசுவாசமாக வாழ்கின்றீர்களா என்றே பார்கின்றார்.

மக்கள் அடிக்கடி அறிவுக்கு எற்புடையதல்லாமல் சுயத்தையே மைய்யமாக வைத்துக்கொள்கின்றனர். அவர்களை எவ்வகையிலும் மன்னியுங்கள். அவர்களுக்கு நன்மையையே செய்யுங்கள்.

அன்பான வார்த்தைகள் விரைவில் மறைந்து போனாலும், அதன் எதிரொலி என்றும் கேட்குமென்பதை மறந்து விடாதீர்கள்.

நீங்கள் அன்பு செலுத்துகின்றவர்களாக இருந்தால், ஏதோ ஒரு உள்நோக்கத்திற்காக அன்பு காட்டுகிறார்கள் என்று உங்களைக் குற்றப்படுத்தலாம். எனினும் அன்புடனேயே இருங்கள். அவர்களுக்கு நன்மையையே செய்யுங்கள்.


நீங்கள் பிறரை குற்றப்படுத்தினால், அவர்களிடம் அன்பு காட்டுவதற்கு உங்களுக்கு நேரம் இருக்காது.

நீங்கள் நேர்மையாளராக இருந்தால் மக்கள் எளிதில் உங்களை ஏமாற்றிவிடலாம். ஆனாலும் நேர்மையாளராகவே இருங்கள். ஏமாற்றியவர்களுக்கும் நன்மையையே செய்யுங்கள்.

நம்மால் மிகப்பெரிய காரியங்கள் செய்து சாதிக்க முடியவில்லை என்றாலும், தேவனுக்காக சிறிய செயல்களையும் அன்புடன் செய்யுங்கள்.

நீங்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியிடனிருந்தால் மக்கள் பொறாமைப்படலாம். எனினும் நீங்கள் மகிழ்ச்சியோடேயே இருங்கள்.

வெறுப்பது யாராக இருந்தாலும், நேசிப்பது நீங்களாகவே இருங்கள். 

இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால், காண முடியாத இறைவனிடம் எவ்வாறு அன்பு செலுத்த முடியும்.

நீங்கள் உங்களிலுள்ள மேன்மையானதை உலகத்திற்கு கொடுங்கள். ஆனாலும் ஒரு சிலருக்கு அது போதுமானதாக இருக்காது. ஆனாலும் தொடர்ந்து மேன்மையானதைக் கொடுத்துகொண்டே இருங்கள்.

இது உங்களுக்கும் அவர்களுக்குமுள்ள காரியமல்ல. இது தேவனுக்கும் உங்களுக்குமுள்ள காரியம் என்பதை முடிவிலே அறிந்துகொள்வீர்கள். – அன்னை தெரேசா

Thanks to Sister Jeevitha Mary

Tamil Christian media

மேய்ப்பன் யார்??

கிறிஸ்து பிறப்பதற்கு முன் 8 ஆம் நூற்றாண்டில் (கி.மு.800 – 700) யூதாவில் பிறந்து வடக்கு தேசமாகிய இஸ்ரவேல் தேசத்திற்கு தீர்க்க தரிசனம் உறைத்தவர் தான் இந்த ஆமோஸ் என்னும் தீர்க்கதரிசி. “ஆமோஸ்” என்றால் “சுமை சுமப்பவர்” என்று பொருள்படும். இறைவாக்கு உரைக்கும்படி கடவுளிடமிருந்து அழைப்பு பெறுவதற்கு முன்னர், ஆமோஸ் ஆட்டு மந்தைக்கு உரிமையாளராகவும், காட்டு அத்திமரத் தோட்டம் பயிரிடுபவராகவும்இருந்தார். “நான் தீர்க்கதரிசியுமல்ல, தீர்க்கதரிசியின் புத்திரனுமல்ல; நான் மந்தை மேய்க்கிறவனும், காட்டத்திப்பழங்களைப் பொறுக்குகிறவனுமாயிருந்தேன்” (ஆமோஸ் 7:14) என்று அவரே தம்மை அடையாளம் காட்டுகிறார். 

எப்படி ஆடுமேய்த்த தாவீதை கர்த்தர் அரசனாக்கினாரோ அதே போல தான் ஆடுமேய்த்த ஆமோசையும் கர்த்தர் தீர்க்கதரிசியாய் மாற்றினார். இவர் மேய்ப்பனின் குணாதிசயத்தை அழக்காக ஆமோஸ் 3:12 -ல் கூறி இருக்கின்றார். “ஒரு மேய்ப்பன் இரண்டு கால்களையாவது ஒரு காதின் துண்டையாவது சிங்கத்தின் வாயிலிருந்து பிடுங்கித் தப்புவிக்குமாப்போல” என்று. இந்த வசனத்தின் பொருள் என்னவென்றால் மேய்ப்பனானவன் எந்த சூழ்நிலையிலும் கொடிய விலங்கிடம் அகப்பட்ட ஆட்டை காப்பாற்ற வேண்டும். தாவீது கூட சிங்கத்திடமிருந்தும் கரடியிடமிருந்தும் மந்தையை காத்துள்ளதை 1 சாமுவேல் 17-34,35 – ல் வாசிகின்றோம். தாவீது தனது ஜீவனையும் பொருட்படுத்தாமல் மந்தையை காப்பாற்றின காரணத்தினால் தான் தேவன் தாவீதை ராஜாவாக உயர்த்தினார். 

சிங்கம் பிடித்து விட்டதே. இனி அந்த ஆடு பிழைக்காது என்று விட்டுவிட்டு செல்லாமல் முடிந்த அளவு போராடி கால்களையாவது அல்லது காதின் துண்டுகளையாவது காப்பற்ற வேண்டுமென்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. அப்படிப்பட்டவர்கள் தான் உண்மையான மேய்ப்பர்கள். ஓவ்வொரு இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவனுக்கும் ஒரு மந்தையை தேவன் கொடுத்துள்ளார். அதாவது ஒரு கூட்ட ஜனங்களை பரலோகத்திற்கு நேராய் நடத்தும் படியாக நம்மிடம் கொடுத்துள்ளார். அந்த மக்கள் பிசாசினால் வஞ்சிக்கப்பட்டு பாவத்தில் விழுகையில் அவர்கள் அவ்வளவுதான் என்று அவர்களை வஞ்சித்த பிசாசின் கைகளில் முற்றிலும் விட்டு விடாமல், மேய்ப்பர்களாகிய நாம்தான் பிசானவனோடு போராடி அவர்களை மீட்க வேண்டும். 

யோவான் 10 அதிகாரம் 14.-15 -ல் இயேசு சொல்கிறார், நானே நல்ல மேய்ப்பன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்” என்று. இயேசுவின் சிலுவையில் ஜீவன் தந்து நாம்மை காப்பாற்றியதால் தான் இன்றைக்கு நாம் விடுதலையுடன் வாழ்கின்றோம். அந்த இயேசு நம்மிடம் கொடுத்துள்ள சிறு மந்தையை கவனமோடு பாதுகாக்கும் பொறுப்பை நம் கையில் கொடுத்துள்ளார். ஆதலால் விழிப்போடு இருந்து மந்தையை காப்போம். பரலோகம் சேர்ப்போம். கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக. ஆமேன்.