NEWS

BJR Christian Media

நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம். கலாத்தியர் 6 9.

Thanks to Jeevitha Mary.

நீங்கள் இன்று செய்யும் நண்மையான காரியங்கள் நாளை மறக்கப்படலாம். எனினும் நன்மையையே செய்யுங்கள்.

தேவன் உங்களை வெற்றியாளாராக பார்க்கவில்லை. நீங்கள் அவருக்கு விசுவாசமாக வாழ்கின்றீர்களா என்றே பார்கின்றார்.

மக்கள் அடிக்கடி அறிவுக்கு எற்புடையதல்லாமல் சுயத்தையே மைய்யமாக வைத்துக்கொள்கின்றனர். அவர்களை எவ்வகையிலும் மன்னியுங்கள். அவர்களுக்கு நன்மையையே செய்யுங்கள்.

அன்பான வார்த்தைகள் விரைவில் மறைந்து போனாலும், அதன் எதிரொலி என்றும் கேட்குமென்பதை மறந்து விடாதீர்கள்.

நீங்கள் அன்பு செலுத்துகின்றவர்களாக இருந்தால், ஏதோ ஒரு உள்நோக்கத்திற்காக அன்பு காட்டுகிறார்கள் என்று உங்களைக் குற்றப்படுத்தலாம். எனினும் அன்புடனேயே இருங்கள். அவர்களுக்கு நன்மையையே செய்யுங்கள்.


நீங்கள் பிறரை குற்றப்படுத்தினால், அவர்களிடம் அன்பு காட்டுவதற்கு உங்களுக்கு நேரம் இருக்காது.

நீங்கள் நேர்மையாளராக இருந்தால் மக்கள் எளிதில் உங்களை ஏமாற்றிவிடலாம். ஆனாலும் நேர்மையாளராகவே இருங்கள். ஏமாற்றியவர்களுக்கும் நன்மையையே செய்யுங்கள்.

நம்மால் மிகப்பெரிய காரியங்கள் செய்து சாதிக்க முடியவில்லை என்றாலும், தேவனுக்காக சிறிய செயல்களையும் அன்புடன் செய்யுங்கள்.

நீங்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியிடனிருந்தால் மக்கள் பொறாமைப்படலாம். எனினும் நீங்கள் மகிழ்ச்சியோடேயே இருங்கள்.

வெறுப்பது யாராக இருந்தாலும், நேசிப்பது நீங்களாகவே இருங்கள். 

இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால், காண முடியாத இறைவனிடம் எவ்வாறு அன்பு செலுத்த முடியும்.

நீங்கள் உங்களிலுள்ள மேன்மையானதை உலகத்திற்கு கொடுங்கள். ஆனாலும் ஒரு சிலருக்கு அது போதுமானதாக இருக்காது. ஆனாலும் தொடர்ந்து மேன்மையானதைக் கொடுத்துகொண்டே இருங்கள்.

இது உங்களுக்கும் அவர்களுக்குமுள்ள காரியமல்ல. இது தேவனுக்கும் உங்களுக்குமுள்ள காரியம் என்பதை முடிவிலே அறிந்துகொள்வீர்கள். – அன்னை தெரேசா

Thanks to Sister Jeevitha Mary

Leave a comment