அனுப்புநர்:
NCC ஜெபசிங்
மாநில ஒருங்கிணைப்பாளர்
நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் .தமிழ்நாடு
பெறுநர்:
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் .
தலைமை செயலகம்.
சென்னை .
பொருள் :
விநாயகர் சதுர்த்தி அன்று சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பவர் மீது உறுதியான நடவடிக்கை எடுப்பதுதொடர்பாக .
கரோனா நோய் தடுப்பு கால கட்டத்தில் தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி விழாவை வீட்டிற்குள்ளேயே கொண்ட வேண்டும் எனவும், பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைப்பது, ஊர்வலம் செல்வது ஆகியவை தடை செய்யபடுகிறது என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது .
இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த தமிழக மக்களால் வரவேற்கப்பட்டது.
மாநில அரசு மக்கள் நலனில் நல்ல சிந்தனையோடும் ந்ல்ல நோக்கத்தோடும் கொண்டு வந்துள்ள இந்த உத்தரவை மீறப் போவதாகவும், தமிழகத்தில் ஒன்றரை லட்சம் விநாயகர் சிலைகளை வைத்து விழா கொண்டாட போவதாகவும் இந்து முன்னணி மாநில தலைவர் தெரிவித்துள்ளார் .
இவ்வாறு தமிழகத்தில் நடந்தால் தமிழக அரசின் தடை உத்தரவை மீறி இந்து முன்ணணி விழா நடத்த போவதாக அறிவித்துள்ள நிலையை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் .
தடையை மீறி விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடி பிரச்சனை ஏற்படுத்தும் அமைப்புகள் மீது தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் .
இப்படிக்கு
NCC ஜெபசிங்
மாநில ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு