NEWS

NCC JEBASINGH

நெல்லையில் இன்று பரபரப்பு. கிறிஸ்தவ அமைப்பின் நிர்வாகி , கிறிஸ்தவ போதகர்களை ஊருக்குள் விட RSS பிரமுகர்கள் தடை

நெல்லை மாவட்டம் மானூர் தாலுகா நடு பிள்ளையார்குளம் பகுதியில் உள்ள மூணாறு நிலச்சரிவில் உயிர்ழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவிக்க இன்று (13.8.20) காலை 8 மணியளவில் திருநெல்வேலியிருந்து நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் மாநில ஒருங்கிணைப்பாளர் NCC ஜெபசிங் , தென்னிந்திய திருச்சபை தொடர்பு துறை இயக்குநர் Rev.கிப்ஸன் ஜான் தாஸ், மற்றும் சிமிர்னா A G சபை போதகர் ஜோயல் ஆகியோர் வாகனத்தில் நடு பிள்ளையார்குளம் சென்றனர்

கிராமத்தில் முன் பகுதியில் RSS பிரமுகர்கள் காரை வழிமறித்து தாங்கள் எங்கள் ஊரில் மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்த உறவினர்கள யாரையும் சந்தித்து ஆறுதல் கூற அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்து நீங்கள் திரும்பி செல்லுங்கள் என தெரிவித்தனர் .

NCC ஜெபசிங் . Rev. கிப்ஸன் ஜான் தாஸ் மற்றும் Rev.ஜோயல் ஆகியோர் நடு பிள்ளையார்குளம் ஊருக்குள் செல்ல முடியாமல் பிள்ளையார்குளத்தில் உள்ள CSi தேவாலயத்தில் பிராத்தனை செய்து விட்டு திரும்பினர்

. இந்த சம்பவத்திற்கு பல்வேறு சமூக ஆர்வலர்கள், கிறிஸ்தவ அமைப்புகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளது குறிப்பிடதக்கது .

3 thoughts on “NCC JEBASINGH”

Leave a comment