அனுப்புநர்:
NCC ஜெபசிங்
மாநில ஒருங்கிணைப்பாளர்
நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் .தமிழ்நாடு.
Ph.8144069997
பெறுநர் .
மாண்புமிகு.தமிழக முதல்வர் அவர்கள்
தலைமை செயலகம்.
சென்னை .
பொருள் :
மாணவர்களுக்கு கூடுதலாக இணைய சேவை மையம் மற்றும் அரசு கல்லூரிகளில் விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டிப்பது தொடர்பாக
வணக்கம் ஐயா.
தமிழகத்தில் மாணவ/மாணவர்கள் கரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரிகளில் நேரடியாக விண்ணப்பிக்க இயலாமல் விண்ணப்பங்கள் இணையவழியே கடந்த ஜுலை மாதம் 20 முதல் 31 வரை விண்ணப்பம் பெறப்பட்டது .
இணையவழியே தமிழக முழுவதும் மாணவ / மாணவிகள் விண்ணப்பிப்பது இதுதான் முதல் முறை. சாதாரண ஏழை ,எளிய கிராமப்புற மாணவர்கள் மலைவாழ் கிராமங்களில் உள்ள மாணவர்கள் போன்றவர்கள் விண்ணப்பிப்பதில் மிகவும் சிரமம் உள்ளது.
மேலும் இணைய சேவை மையங்களை அதிக இடங்களில் அமைத்து மாணவர்களுக்கு விண்ணப்பிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழகத்தில் கடந்தாண்டு விண்ணப்பித்த மாணவர்களை விட இந்தாண்டு மிக குறைவாகவே விண்ணப்பித்துள்ளதாக தெரிகிறது. மாணவ / மாணவிகளுக்கு இணைய வழி விண்ணப்பிப்பதில் பல்வேறு பிரச்சனைகள் இருப்பதால் பல மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாமல் போனது .
12 ம் வகுப்பில் ஒரு தேர்வு மட்டும் எழுதாமல் இருந்த 34 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதி தற்போது முடிவுகள் வந்துள்ளன . அந்த மாணவர்கள் புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் .
எனவே தமிழக அரசு மாணவ/மாணவிகளின் நலன் கருதி இம்மாதம் இறுதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்க கால அவகாசத்தை தாங்கள் வழங்கிடவும், அரசு சார்பில் இணைய சேவை மையங்களை அதிகமாக அமைத்து மாணவ | மாணவிகளுக்கு உதவிடவும் மேற்கண்ட கோரிக்கை நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் சார்பாக கேட்டுக் கொள்கிறோம் .
இப்படிக்கு
NCC ஜெபசிங்
மாநில ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு
Very nice God bless you and your team Effort
LikeLike