NEWS

NCC Jeba Singh

அனுப்புநர்.

NCC ஜெபசிங்
மாநில ஒருங்கிைணப்பாளர்
நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் தமிழ்நாடு. Ph.8144069997 .

பெறுநர்

மாண்புமிகு.தமிழக முதல்வர் அவர்கள்
தலைமை செயலகம்
தமிழ்நாடு .

பொருள் :

தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களை உடனடியாக திறப்பது மற்றும் திருச்சபை ஊழியர்களுக்கு நிவாரண நிதி வழங்குவது குறித்து..

வணக்கம் ஐயா,

கரோனா ஊரடங்கு காலத்தில் தேவாலயங்கள் அனைத்தும் மத்திய அரசால் மூடப்பட்டன

தற்போது கடந்த மாதங்களில் இருந்து கிராம புறங்களில் உள்ள தேவாலயங்கள் திறப்பதற்கு தாங்கள் உத்தரவு பிறப்பித்தீர்கள். அனைத்து கிறிஸ்தவ மக்கள் சார்பாக முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் .

தற்போது கரோனா நோய் தொற்று படிப்படியாக குறைந்து வருவது நாம் அனைவருக்கும் ஆறுதலாக உள்ளது.

இந்த சூழ்நிலையில் திருச்சபைபோதகர்கள் , ஊழியர்கள் மிகவும் பெரிய பாதிப்பையும் , பொருளாதார பின்னனடவையும் சந்தித்து வருகிறார்கள் .

தமிழக அரசு கூறும் அனைத்து விதிமுறைகளையும் கடைபிடித்து முகக் கவசம், சமூக இடைவெளி, ஆகியவற்றுடன் தேவலாயங்களை திறந்து ஆராதனை நடத்த தாங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் தமிழக அரசு கூறும் அனைத்து விதிமுறைகளையும் கடைபிடிப்போம் என தெரிவித்துக் கொள்கிறோம் .
.

தமிழகத்தில் உள்ள பதிவு பெற்ற திருச்சபை ஊழியர்களுக்கு கரோனா கால நிவாரண நிதியாக 5000/௹பாய் வழங்க தாங்கள் ஆவண செய்யும்படியும் தமிழக கிறிஸ்தவ திருச்சபை ஊழியர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்

தமிழகத்தில் சிறுபான்மை மக்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வரும் தங்களது அரசுக்கு எங்களது வாழ்த்துக்களையும் , நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம் .

இப்படிக்கு

ஆண்டவரின் பணியில்
NCC ஜெபசிங்
மாநில ஒருங்கிணைப்பாளர்
நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் தமிழ்நாடு

NCC jeba Singh

Leave a comment