ஆன்லைன் கல்வித் திட்டத்தை தடை செய்ய தேசிய குழந்தைகள் நல ஆணையத்தில் நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் மாநில ஒருங்கினணப்பாளர் NCC ஜெபசிங் புகார் மனு .
ஏழை எளிய நடுத்தர குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளின் பெற்றோர்களால் ஆன்ட்ராய்டு செல்போன், மற்றும் மடிக்கணினி வாங்க முடியாத சூழலில் அவர்கள் எப்படி ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியும்,,?
ஆன்லைன் வகுப்புகளால் குழந்தைகளுக்கு கண், காதுகள் பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக அரசு மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்
, மேலும் ஆன்லைன் மூலம் வகுப்புகளில் இடையிடையே ஆபாச வலைதளங்கள் வந்து குழந்தைகளின் கவனத்தை சிதறடிக்கப்படுவது . மிகவும் கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும் .
மாற்று திறனாளி குழந்தைகளுக்கு எவ்வாறு கல்வி வழங்க பட வேண்டும் என்பது குறித்த அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை .
எனவே ஆன்லைன் வகுப்புகளை தடை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய குழந்தைகள் நல ஆணையத்தில் நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் மாநில ஒருங்கினணப்பாளர் NCC ஜெபசிங் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்