NEWS

NCC Jebasingh

தமிழகத்தில் கல்லூரி இறுதித் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் மாநில ஒருங்கிணைப்பாளர் NCC ஜெபசிங் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் .

கரோனா பாதிப்பு காரணமாக பள்ளி தேர்வு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து கலை , அறிவியல், பாலிடெக்னிக், பொறியியல் என அனைத்து கல்லூரிகளிலும் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு தவிர அனைத்து தேர்வுகளும் *ரத்து *செய்யப்படுவதாக தமிழக* அரசு அறிவித்தது.

இந்நிலையில் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யாமல் காலம் தாழ்த்துவதால் மாணவர்கள் கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகி காத்திருக்கும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் .

வங்கியில் கல்விக் கடன் பெற்று படிக்கும் மாணவ / மாணவிகள் உரிய காலத்தில் வேலைக்கு செல்லவில்லை எனில் மிகப் பெரிய பாதிப்பை அவர்கள் சந்திக்க நேரிடும் .

கல்வித்துறை உடனடியாக மாணவர்கள் , பெற்றோர்கள் , பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்கவும், இந்த ஊரடங்கு காலத்தில் தேர்வு எழுதக்கூடிய மாணவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டால் அவர்களின் எதிர்காலம் கேள்வி குறியாகி விடும்.

எனவே தமிழக முதல்வர் அவர்கள் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் .

Jeba Singh

ABM TV

Leave a comment