Tamil Christian media

National Christian Council

தமிழக முதலமைச்சருக்கு குமரி மாவட்ட கத்தோலிக்க ஆயர்கள் மீது பதியப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் மனு .

அனுப்புநர்:

சகோ.NCC  ஜெபசிங்
மாநில ஒருங்கிணைப்பாளர்
நேஷனல் கிறிஸ்டியன்                  கவுன்சில்
தமிழ்நாடு. Ph. 8144069997

பெறுநர்:

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள்.
தலைமை செயலகம்
சென்னை .

வணக்கம்

பொருள் : குமரி மாவட்டத்தில் கத்தோலிக்க ஆயர்கள் மீது பதியப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டி.

கரோனாவுக்கு எதிராக நாடு முழுவதும் 17 ந் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் டாஸ்மார்க் கடைகள் திறக்கப்பட்டன .

இதை கண்டித்து 8ந் தேதி கத்தோலிக்க திருச்சபையின் ஆயர் நசரேன்சூசை . மற்றும் குளித்துறை மறை மாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ் வறுவேல் உள்ளிட்டோர் பதாகைகள் ஏந்தி அமைதியான முறையில் டாஸ்மார்க் கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர் .

அப்போது அரசு அறிவித்த தனி மனித இடைவெளி பின்பற்றபட்டது .
சட்ட பிரிவு 144க்கு எதிராக அவர்கள் செயல்படவில்லை .

அரசுக்கு எதிராக அவர்கள் போராடவோ , அரசுக்கு எதிராக போராட்டத்தை தூண்டவோ இல்லை.

மக்களை நல்வழியில் நடத்தி செல்லக் கூடிய குமரி மாவட்ட 2 ஆயர்கள் மீது மாவட்ட காவல் துறை பொய் வழக்கு போட்டுள்ளனர்.

இந்த செயல் தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த சிறுபான்மை மக்களை வேதனை அடைய செய்துள்ளது.

ஆகவே தாங்கள்  கத்தோலிக்க திருச்சபையை சோந்த ஆயர்கள் மீது பதியப்பட்ட பொய் வழக்கை உடனடியாக ரத்து செய்ய தாங்கள் ஆவண செய்யும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் .

நன்றி.

இப்படிக்கு*

NCC ஜெபசிங்
மாநில ஒருங்கினணப்பாளர்
நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் தமிழ்நாடு .

தமிழக முதலமைச்சருக்கு குமரி மாவட்ட கத்தோலிக்க ஆயர்கள் மீது பதியப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் அளித்த மனுவில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

சகோ. ஜெபசிங். மாநில ஒருங்கிணைப்பாளர்

Leave a comment