செங்கல்பட்டு மாவட்டத்தில் வாயலூர் கிராமத்தில் கிறிஸ்தவ சபையை தீயிட்டு கொளுத்திய சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க தமிழக முதல்வருக்கு நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் மாநில ஒருங்கின ணப்பாளர் NCC ஜெபசிங் கோரிக்கை .
செங்கல்பட்டு மாவட்டம் வாயலூர் கிராமத்தில் மாற்று திறனாளியான போதகர் ரமேஷ் (கண் தெரியாதவர்) கடந்த 10 வருடங்களாக மெய் சமாதான சபை நடந்தி வருகிறார் .
12. ந் தேதி இரவு சமூக விரோத கும்பல்கள் போதகர் சபையை முழுவதுமாக தீயிட்டு கொளுத்தி நாசம்படுத்தியுள்ளனர்
.
சபையில் உள்ள பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி நாசமாகி விட்டன.
சுமார் 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் , அனைத்தும் தீயில் எரிந்து விட்டன .
அமைதி பூங்கா வான தமிழகத்தில் தங்களுடைய ஆட்சியில் மதககலவரத்தை துண்ட கூடிய விதத்தில் மேற்கண்ட சம்பவம் நடைபெற்றுள்ளது .
கிறிஸ்தவ மக்கள் மத்தியில் மேற்கண்ட நிகழ்வு ஒரு வித அச்ச உணர்வை ஏற்படுத்தி உள்ளது.
ஆகவே தாங்கள் கிறிஸ்தவ சிறுபான்மையினருக்கு ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பில் தலையிட்டு உடனடியாக சமூக விரோத கும்பலை கைது செய்து சிறையில் அடைக்கவும் , தீயில் கருகிய பொருட்கள் மற்றும் சபைக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கிட நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் தமிழ்நாடு கமிட்டி சார்பாக கேட்டுக்கொள்கிறோம் .
1 thought on “NCC Jeba Singh Raise Complaint”