Tamil Christian media

NCC JEBA SINGH

நீதிமன்றத்தில் RSS நிகழ்ச்சி .
நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் கண்டனம் .

நீதிமன்ற வளாகத்தில் RSS மருத்துவ முகாம் நடத்தியதை நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் மாநில ஒருங்கிணைப்பாளர் NCC ஜெபசிங் விடுத்துள்ள கண்டன அறிக்கை .

விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் திண்டிவனம் ஆகிய ஊர்களில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் RSS அமைப்பு மருத்துவ முகாம் நடத்த அனுமதி அளித்துள்ளது.

RSS ஒரு மத அமைப்பாகும் / RSS நடத்திய மருத்துவ முகாமில் நீதிபதிகள் பங்கேற்றது அரசியல் சாசனத்தின் படி எவ்வித பாகுபாடின்றி செயல்பட வேண்டிய நீதிபதிகள் மத அமைப்பு நடத்திய நிகழ்வில் கலந்து கொண்டது வருத்தத்திற்குரிய செயலாகும் .

வருங்காலத்தில் எந்த ஒரு மத அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு நீதிமன்ற வளாகத்தில் அனுமதி வழங்க கூடாது என உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் சார்பாக கேட்டுக் கொள்கிறோம் .

NCC JEBA SINGH

Leave a comment