அனுப்புநர்
NCC ஜெபசிங்
மாநில ஒருங்கிணைப்பாளர்
நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் .தமிழ்நாடு. தொடர்பு எண் . 8144069997 .
பெறுநர் :
மாண்புமிகு.தமிழக முதலமைச்சர் அவர்கள்.
தலைமை செயலகம்.
சென்னை. 9.
கிறிஸ்தவ மதத்திற்கும், கிறிஸ்தவ போதகர்களுக்கும் எதிராக தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் திரு.காட்பிரே நோபுள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க கோரி மனு .
மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு வணக்கம்.
தமிழகத்தில் அம்மாவின் ஆசியில் நல்லாட்சி நடத்தி வரும் தாங்கள் சிறுபான்மையினருக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருவதற்கு சிறுபான்மை மக்கள் சார்பாக நன்றி தெரிவித்து கொள்கிறோம்
கிறிஸ்தவ போதகர்கள்மக்களுக்கு நல்வழியையும் , நல்லொழுக்கத்தையும்போதிக்கும் பணியைமட்டும்மே செய்துவருகின்றனர் .
கடந்த ஏப்ரல் மாதம் 20ந் தேதி முதல் எந்த ஒரு பதிவு பெறாத சான்றிதழ்கள் இல்லாது தன்னை தானே போலியாக பேராயர் என அறிவித்து கொள்ளும் திருநெல்வேலி மாவட்டம் இட்டேரி கிராமத்தை சேர்ந்த திரு காட்பிரே நோபுள் அவர்கள் தொடர்ந்து கிறிஸ்தவ மதத்தையும் கிறிஸ்த்தவ போதகர்களையும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவதூறாக பேசி வருகிறார் .
இது போன்ற பேச்சு தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த கிறிஸ்தவர்களுக்கும் , போதகர்களுக்கும் மிகுந்த மன உளைச்சலை உண்டாக்கி வருகிறது.
கரோனா நோய் தடுப்பு நடவடிக்கையில் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட தன்னார்வலர் ID cardயை திரும்ப வழங்காமல் தமிழகத்தில் பல பகுதிகளுக்கு அந்த ID Card யை சட்ட விரோதமாக பயன்படுத்தி வருகிறார்.
சமூக வலைதளங்கில் சாதி உணர்வை தூண்ட கூடிய விதத்திலும், சாதி மோதல்களை ஏற்படுத்தும் விதமாகவும் பெண்கள் குறித்தும் பலவிதமான அவதூறு வார்த்தைகளையும் பேசி தொடர்ந்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்.
திரு.காட்பிரே நோபிள் அவர்கள் மீது தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மோசடி வழக்குகள் பதிவாகி நிலுவையில் உள்ளன .
சிறுபான்மை சமூக மக்களையும் , போதகர்களையும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வரும் திரு. காட்பிரேநோபுள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுத்து சிறுபான்மை மக்களுக்கும் போதகர்களின் உரிமைகளை காத்திட தாங்கள் ஆவண செய்யும்படி தங்கள் சமூகம் பணிந்து கேட்டுக்கொள்கிறேன்
நன்றி ..
இப்படிக்கு
NCC ஜெபசிங்
மாநில ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு .