நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் இந்திய தூதரகத்துக்கு வேண்டுகோள்
கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கஜகஸ்தானில் மருத்துவ கல்வி பயிலும் தமிழகத்தை சேர்ந்த 20 மாணவ | மாணவிகளை இந்தியாவுக்கு அழைத்து செல்ல உதவுமாறு இந்திய தூதரகத்தில் உதவி கோரியுள்ளனர்.
கஜகஸ்தானில் மருத்துவ கல்வி பயிலும் 20 மாணவர்கள் இந்தியா திரும்ப முடியாமல் பரிதவித்து வருகின்றனர். அவர்களுக்கு தற்சமயம் மருத்துவ கல்லூரி விடுதியில் அடைக்கலம் புகுந்துள்ளனர் உடனடியாக இந்தியா திரும்புவதற்கு விரும்புகின்றனர். அவர்கள் கஜகஸ்தானில் உள்ள இந்திய தூதுதரகத்தில் உதவி கோரியுள்ளனர்.
இந்திய தூதுதரகம் அவசர நடவடிக்கை எடுத்து கஜகஸ்தானில் பரிதவிக்கும் 20 மாணவர்களை உடனடியாக தாயகம் அழைத்து வர விரைந்து நடவடிக்கை எடுக்க நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெபசிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த சில நாட்களாக மத மோதல்களை உருவாக்கும் விதமாக சில விஷமிகள் தூண்டி விட்டு பொய்யான பதிவை போட்டு வருகின்றனர். அந்த வீடியோவில் ரெயிலில்.ஒரு அறையில் ஒரு சாமியாரை பொதுமக்கள் சூழ்ந்து தாக்குவதை வீடியாவாக பதிவிட்டிருந்தனர்.
மத வெறியை உருவாக்கும் சமூக விரோதிகள்
இந்த வீடியோ டுவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் அதிகமாக பரவியது. அதில் இந்து மதத்தை சார்ந்தவர்களிடம். ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து முன்னணியைச் சார்ந்தவர்கள். மத வெறியை தூண்டும் விதமாக ஒரு சாமியாரை கிறிஸ்தவர்கள் அனைவரும் சேர்ந்து தாங்குகிறார்கள் என்று பொய்யாக பரப்புரை செய்தனர்.
அவற்றில் சில….
இதன் மூலம் கிறிஸ்தவ மற்றும் இந்து மக்களிடையே வேண்டா வெறுப்பும் கோபமும் உருவானது. மத மோதல்கள் கூட நிகழும் அபாயமும் ஏற்பட்டது…
உண்மையில் நடந்தது என்ன?
2020 . மார்ச் . 11 ம் திகதி நாகர்கோவில் – கோயம்புத்தூர் செல்லும் விரைவு ரெயிலில். 12 அல்லது 13 வயது மதிக்கத்தக்க சிறுமி தரையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது சாமியார். மற்றும் இருவர் அச் சிறுமியுடன் சில்மிஷத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இதனை பார்த்த பொது மக்கள் . அச்சாமியார் மற்றும் இருவருக்கு தர்ம அடி கொடுத்து திண்டுக்கல் இரயில் நிலையத்தில் இறக்கி விட்டனர்.
சமூக வலைதளத்தில் வைரல்.
சம்பவம் நடந்த அதே இரயிலில் பயணம் செய்த ஒருவர் இந்த சம்பவத்தை வீடியோவாக பதிவுச் செய்து தன் முகநூலில் வெளியிட்டிருந்தார். அதில்….
“சிறுமியிடம் சில்மிஷம் செய்த சாமியார் மற்றும் இருவரையும் பொதுமக்கள் வெளுத்து வாங்கும் காட்சி.” “நாகர்கோவில் – கோயம்பத்தூர் விரைவு இரயிலில் தரையில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியிடம் சாமியார் உட்பட மூன்று பேர் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர், இதை கவனித்த சக பயணிகள் அவர்களை சரமாரியாக அடித்து திண்டுக்கல் இரயில் நிலையத்தில் இறக்கி விட்டனர்.”
இவ்வாறு ஷெகினா சந்தோஸ் 11 மார்ச் 2020 அன்று . 04.24 நேர அளவில் பதிவிட்டிருந்தார்
இந்த வீடியோவை தவறாக சித்தரித்து அந்த ரெயில் பெட்டியில் பயணம் செய்த அனைவரும் கிறிஸ்தவர் எனவும், அதனால் இந்துச் சாமியாரை தாக்கியதாகவும் சில விஷமிகளால் பொய்யாக பரப்ப பட்டது ஆகும்.
தாக்கியவர்கள் கிறிஸ்தவர்களா?
அந்த சாமியாரை முதலில் அடித்தவர் முதல் கொண்டு அதில் நிற்பவர்கள் அனைவருமே இந்து சகோதரர்களே ஆவர். ஆதாரம்
வீடியோ பதிவு செய்யப்பட்ட நேரம் மற்றும் ஆதாரம்:
வீடியோ பதிவு
வீடியோ பதிவு செய்தவரின் பெயர் சந்தோஸ். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் சம்பவம் நிகந்த ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். மேல் படுக்கையில் இருந்து தான் வீடியோ பதிவும் செய்துள்ளார். ஆதாரம்..
போலிகளை இனம் காணுவோம்.
இவ்வாறு பொய்யான செய்திகளை பரப்பி அதில் பிரச்சினைகளை உருவாக்கும் இப்படியான நபர்களிடம் அனைவரும் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். உண்மை தன்மையை அறியாத வரையில் எந்த செய்தியையும் பரப்பாமல் இருப்பதே நல்லது…
குமரி மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் குமுதா அவர்களை கைது செய்து மேல் நடவடிக்கை எடுக்க நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் தமிழ்நாடு கமிட்டி தமிழக அரசுக்கு கோரிக்கை.
Thirunelveli.
குமரி மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் குமுதா அவர்களை கைது செய்து மேல் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் தமிழ்நாடு கமிட்டி கோரிக்கை . . கடந்த பல வருடங்களாக குமரி மாவட்டத்தில் சிறுபான்மையினர், மற்றும் பல்வேறு அமைப்புகள் மூலம் நடத்தப்படும் குழந்தைகள்காப்பகங்களில் அரசின் உரிய அனுமதி இருந்தாலும் பல்வேறு நிலைகளில் தொடர்ந்து இடையூறு செய்து பல்வேறு வகையில் காப்பகங்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி செயல்பட்ட குமரி மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் குமுதா அவர்களின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் (14.2.20) அன்று சோதனையிட்டு ரூ1,35,000 .த்தை கைப்பற்றி உள்ளனர் . குமுதா அவர்களின் ஊழல் முகத்தை வெளி உலகுக்கு தெரியபடுத்திய லஞ்ச ஒழிப்பு துறை சட்டபடி கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் தமிழ்நாடு கமிட்டி சார்பாக கேட்டு கொள்கிறோம்.
செ.சா .ஜெபசிங் . மாநில ஒருங்கினணப்பாளர் . நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் தமிழ்நாடு
ஜெருசலேம் புனிதப் பயணநிதி . பிப்.28 வரைவிண்ணப்பிக்கலாம் . தமிழக அரசு அறிவிப்பு.
ஜெருசலேத்துக்குப் புனிதப்பயணம்மேற்கொள்வதற்குகிறிஸ்தவர்களுக்குவழங்கப்படும் உதவி நிதிபெற பிப்ரவரி 28ஆம்தேதி வரைவிண்ணப்பிக்கலாம் என்றுதமிழக அரசுஅறிவித்துள்ளது .
தமிழகத்தை சேர்ந்தகிறிஸ்த்தவஅனைத்துப் பிரிவினர்களையும் உள்ளடக்கிய 600கிறிஸ்தவர்கள்* 2019-2020 ஆம் ஆண்டில்ஜெருசலேம்புனிதப் பயணம்மேற்கொள்வதற்காக
தமிழக அரசால் நபர்ஒருவருக்கு ரூ 20 ஆயிரம்நிதி உதவிவழங்கும் திட்டத்தின் கீழ்பயன் பெற விரும்பும்கிறிஸ்தவர்களிடமிருந்துவிண்ணப்பம்அனுப்ப பிப்.28ம்தேதி வரை* நீட்டிக்கப்பட்டுள்ளது .
இதற்கான விண்ணப்பபடிவம் அந்தந்த மாவட்ட ஆட்சியர்அலுவலகங்களில்இயங்கும் மாவட்டபிற்படுத்தப்பட்டோர் *மற்றும்சிறுபான்மையினர் நலஅலுவலகத்தில்கட்டணமின்றி பெறலாம்.
மேலும் சபைகள் சார்பில்போதகர்கள்மொத்தமாகவிண்ணப்பிக்கலாம் .
மேலும் தொடர்புக்கு. செ.சா.ஜெபசிங் . கண்காணிப்பு குழு* உறுப்பினர், தமிழ்நாடுசிறுபான்மையினர்பொருளாதாரமேம்பாட்டுக் கழகம் .
மாநில ஒருங்கிணைப்பாளர் , நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் .தமிழ்நாடு. தொடர்பு எண் .8144069997
கன்னியாகுமரி மாவட்டம். கருங்கல் அருகாமையில் உள்ள வெள்ளியாவிளை பகுதியில் இயங்கி வரும் அறக்கட்டளை ஜனநாயக ஒற்றுமை கழகம் சேவை அறக்கட்டளை என்ற பெயரில் இயங்கி வருகிறது.
சமூக சேவை
இதில் கிட்டத்தட்ட 45 க்கும் மேற்பட்ட வாலிபர்கள் தன்னார்வளராக இணைந்து கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக இரத்த தானம், ஏழை மக்களுக்கு உதவுதல், குளம் தூர்வாரல், மரக்கன்றுகளை நடுதல், போன்றவற்றை கடந்த ஒன்றரை ஆண்டாக செய்து வருகின்றனர்.
காக்கவிளை பகுதி
இன்று 05/01/2020 காக்கவிளை பகுதியில் தன்னார்வலர்கள் இணைந்து மரக்கன்றுகளை நட்டனர். இது பொதுமக்களுக்கிடையே பெரும் வரவேற்ப்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.
சமூக சேவையில் இணைய விருப்பமா?
ஜனநாயக ஒற்றுமை கழகக் சேவை அறக்கட்டளை சமூக சேவையில் இணைய நீங்கள் விரும்பினால் விரும்பினால் – 7598506173 என்ற எண்ணிற்கு தொடர்புக் கொள்ளுங்கள்.
குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிர்ப்பு தெருவித்து நேஷ்னல் கிறிஸ்டின் கவுன்சில் இயக்கத்தின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் சகோ ஜெபசிங் அவர்கள் மத்திய அரசுக்கு கண்டன அறிக்கையை வெளியிட்டு இருந்தார்.
அந்த அறிக்கையில்.
2019 ஆம் ஆண்டில் குடியுரிமை மசோதாவை நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் மத்திய அரசு நிறைவேற்றி இருக்கின்றன. சட்ட விரோதமாக புலம்பெயர்ந்த முஸ்லீம் அல்லாதோர் இந்த குடியுரிமை மசோதா மூலம் இந்திய குடியுரிமை பெற முடியும் என்பதால் முஸ்லீம்கள் மட்டுமே இந்த நாட்டிலிருந்து வெளியேற்றுகின்ற வகையில் இந்த சட்ட திருத்தம் உள்ளது.
முஸ்லீம் மக்களுக்கு மட்டுமே இந்த சட்டம் பொருந்துவதாக இருப்பதை நேஷனல் கிறிஸ்டின் கவுன்சில் கண்டிக்கிறது. இந்தியாவில் முஸ்லீம் ஒருவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், கஷ்டங்கள், தடுப்பு காவல் மையத்துக்கு அனுப்பப்படுவது, அவர்களின் குடியுரிமை உரிமைகளை பறிப்பது போன்ற கடும் தண்டனை செயல் போன்று அனைத்தும் மற்ற சிறுபான்மை மக்களுக்கும் வரும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
நான் முஸ்லீம் அல்ல எனக்கு எதுவும் நடக்காது என்ற தவறான உணர்வுகளை புறந்தள்ளி அனைத்து தரப்பு மக்களும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெருவிக்க வேண்டியது நமது கடமையாகும். இவ்வாறு நேஷனல் கிறிஸ்டின் கவுன்சில் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் சகோ ஜெபசிங் அவர்கள் கண்டன அறிக்கையை வெளியிட்டு உள்ளார்
(கீழே படம்) இந்த ஓவியமானது அசீரியர்கள் காலங்களில் ஏற்றுக்கொண்டிருந்த வழக்கமான மரண தண்டனையை குறிக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வயிறு அல்லது தொண்டையால் ஒரு பங்கின் புள்ளியில் கட்டப்பட்டனர், இதனால் அவர்களின் சொந்த எடை அவர்களை கீழ்நோக்கி தள்ளும்.
அசீரிய தீவிரத்தை வெளிப்படுத்தும் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. சிறைபிடிக்கப்பட்ட ஒரு மன்னன் தலைநகருக்கு அழைத்துச் செல்லப்பட்டு, வெற்றியின் அரச தேரை இழுக்க நிர்பந்திக்கப்பட்டான். அவர்களின் உதடுகள் அல்லது மூக்கு வழியாக மோதிரங்கள் போடப்பட்டன, சில சமயங்களில் கைகள், கால்கள், மூக்கு மற்றும் காதுகள் துண்டிக்கப்பட்டு, அவை கண்மூடித்தனமாக இருந்தன, அவற்றின் நாக்குகள் வாயிலிருந்து கிழிக்கப்பட்டன. கைதிகள் உயிருடன் தோலில் வைக்கப்பட்டு தீ வைக்கப்பட்டனர். அஞ்சலி சேகரிக்கும் பொருட்டு அவர்களின் தோல்கள் எதிரி நகர வாயில்களுக்கு அருகிலும் தொங்கவிடப்பட்டன. கிமு 722 இல் இரக்கமற்ற அசீரியர்களை இஸ்ரவேலின் வடக்கு ராஜ்யத்தை கைப்பற்ற இறைவன் அனுமதித்தார், ஏனெனில் இஸ்ரேல் தனக்கு எதிரான கிளர்ச்சியின் காரணமாக. அவர்கள் மீண்டும் ஒருபோதும் காணப்படவில்லை.
“ஆகவே, அவர்கள் அந்த ராஜாக்களை யோசுவாவுக்குக் கொண்டு வந்தபோது, யோசுவா இஸ்ரவேல் மனிதர்கள் அனைவரையும் அழைத்து, அவருடன் சென்ற போர்வீரர்களின் தலைவர்களிடம்,” அருகில் வாருங்கள், உங்கள் கால்களை கழுத்தில் வைக்கவும் இந்த ராஜாக்கள். “அவர்கள் அருகில் வந்து கழுத்தில் கால்களை வைத்தார்கள்.” – (யோசுவா 10:24)
கர்த்தர் அசீரியர்கள் மீது நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே:
“இதோ, நான் உங்களுக்கு விரோதமாயிருக்கிறேன்” என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; “நான் உங்கள் பாவாடைகளை உங்கள் முகத்தின் மேல் தூக்குவேன், ஜாதிகளுக்கு உங்கள் நிர்வாணத்தையும், ராஜ்யங்கள் உன் அவமானத்தையும் காண்பிப்பேன். உன்னை விட்டு ஓடிப்போய், ‘நினிவே வீணாகிவிட்டது! அவளுக்கு யார் புலம்புவார்கள்?’ உங்களுக்காக நான் எங்கே ஆறுதலளிப்பேன்? ” – (நாகூம் 3: 5-7)
“அசீரியா” என்ற வார்த்தையை பைபிள் எங்கே எதற்கு குறிப்பிடுகிறது?
எரேமியா 2:18 – சீகோரின் தண்ணீரைக் குடிக்க எகிப்தின் வழியில் இப்போது என்ன செய்ய வேண்டும்? அல்லது அசீரியாவின் வழியில், ஆற்றின் நீரைக் குடிக்கஎன்ன செய்ய வேண்டும்?
2 இராஜா 16:10 – அப்பொழுது ராஜாவாகிய ஆகாஸ் ராஜாவாகிய திகிலாத்பிலேசர் சந்திக்க ராஜாவுக்கு தமஸ்கு சென்றார் அசீரியா , மற்றும் ஒரு பலிபீடம் கண்டார் [இருந்தது].
2 இராஜா 19: 4 – அசீரியாவின் ராஜாவாகிய ரப்ஷாகேயின் எல்லா வார்த்தைகளையும் உன் தேவனாகிய கர்த்தர் கேட்பார்.ஜீவனுள்ள தேவனை நிந்திக்க அவனுடைய எஜமான் அனுப்பியிருக்கிறான்; உன் தேவனாகிய கர்த்தர் கேட்ட வார்த்தைகளைக் கடிந்துகொள்வார்; ஆகையால் எஞ்சியவர்களுக்காக உம்முடைய ஜெபத்தை உயர்த்துங்கள்.
ஏசாயா 37: 4 – ஜீவனுள்ள தேவனை நிந்திக்க அசீரியாவின் ராஜா அனுப்பிய ரப்சாகேயின் வார்த்தைகளை உன் தேவனாகிய கர்த்தர் கேட்பார், உங்கள் தேவனாகிய கர்த்தர் கேட்ட வார்த்தைகளைக் கடிந்துகொள்வார்; எஞ்சியிருக்கும் எஞ்சியவர்களுக்காக [உம்] ஜெபம்.
எரேமியா 2:36 – உங்கள் வழியை மாற்றுவதற்கு நீங்கள் ஏன் இவ்வளவு முயற்சி செய்கிறீர்கள்? அசீரியாவைக் கண்டு வெட்கப்படுவதைப் போல நீங்களும் எகிப்தைப் பற்றி வெட்கப்படுவீர்கள் .
2 நாளாகமம் 32: 9 – இதற்குப் பிறகு அசீரியாவின் ராஜாவான சன்னகெரிப் செய்தார்தனது ஊழியர்களை எருசலேமுக்கு அனுப்புங்கள், ஆனால் அவர் லாகீஷுக்கு எதிராகவும், அவனுடைய எல்லா சக்தியையும் யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவிற்கும், எருசலேமில் இருந்த எல்லா யூதாவிற்கும்,
2 நாளாகமம் 30: 6 – ஆகவே, இஸ்ரவேல் மற்றும் யூதா முழுவதிலும் உள்ள ராஜாவிடமிருந்தும் அவனுடைய இளவரசர்களிடமிருந்தும், ராஜாவின் கட்டளைப்படி, “இஸ்ரவேல் புத்திரரே, ஆபிரகாம், ஐசக், இஸ்ரவேல், மற்றும் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்புங்கள். அசீரியாவின் ராஜாக்களின் கையில் இருந்து தப்பித்த உன்னுடைய மீதமுள்ளவருக்கு அவன் திரும்பி வருவான் .
2 இராஜா 18: 9 – எசேக்கியா ராஜாவின் நான்காம் ஆண்டில், இஸ்ரவேலின் ராஜாவாகிய எலாவின் மகன் ஹோஷியாவின் ஏழாம் ஆண்டு, அசீரியாவின் ராஜா ஷால்மனேசர் சமாரியாவுக்கு எதிராக வந்து அதை முற்றுகையிட்டான்; .
2 இராஜா 18:17 – அசீரியாவின் ராஜா எருசலேமுக்கு எதிராக ஒரு பெரிய சேனையுடன், ரப்சாரிஸ் மற்றும் ரப்சகே ஆகியோரை லாக்கிஷிலிருந்து ராஜா எசேக்கியாவுக்கு அனுப்பினார். அவர்கள் மேலே சென்று எருசலேமுக்கு வந்தார்கள். அவர்கள் எழுந்ததும், அவர்கள் வந்து, முழுமையான குளத்தின் வழித்தடத்தில் நின்றார்கள், அது முழு வயலின் நெடுஞ்சாலையில் உள்ளது.
2 இராஜாக்கள் 17:26 – ஆகையால், அவர்கள் அசீரியா ராஜாவிடம் , “நீ நீக்கிவிட்டு, சமாரியா நகரங்களில் வைக்கப்பட்ட தேசங்கள், தேசத்தின் தேவனுடைய வழியை அறியாதிருக்கின்றன; ஆகையால், அவர் அவர்களிடையே சிங்கங்களை அனுப்பினார் தேசத்தின் கடவுளின் வழியை அவர்கள் அறியாததால், அவர்களைக் கொன்றுவிடுகிறார்கள்.
2 இராஜா 17:24 – அசீரியாவின் ராஜாபாபிலோனிலிருந்து, குத்தாவிலிருந்து, ஆவாவிலிருந்து, ஹமாதிலிருந்து, செபார்வைமில் இருந்து [மனிதர்களை] அழைத்து வந்து, அவர்களை இஸ்ரவேல் புத்திரருக்குப் பதிலாக சமாரியா நகரங்களில் வைத்தார்கள்; அவர்கள் சமாரியாவைக் கொண்டு நகரங்களில் குடியிருந்தார்கள் அனைத்தையும் குறிக்கும்.
2 இராஜாக்கள் 20: 6 – நான் உங்கள் நாட்களில் பதினைந்து வருடங்களைச் சேர்ப்பேன்; நான் உன்னையும் இந்த நகரத்தையும் அசீரியா ராஜாவின் கையிலிருந்து விடுவிப்பேன் ; என் நிமித்தம், என் வேலைக்காரன் தாவீதின் நிமித்தம் நான் இந்த நகரத்தைக் காத்துக்கொள்வேன். 2 நாளாகமம் 28:21 – ஆகாஸ் ஓர் பகுதியை கர்த்தருடைய ஆலயத்தின் [வெளியே], மற்றும் [வெளியே] ராஜாவின் வீட்டின், பிரபுக்களின் விட்டு எடுத்து, கொடுத்தீர்கள் [அது] ராஜா நோக்கி அசீரியா : ஆனால் அவர் அவருக்கு உதவி செய்யவில்லை. சகரியா 10:10
நான் அவர்களை மீண்டும் எகிப்து தேசத்திலிருந்து வெளியே கொண்டு வந்து அசீரியாவிலிருந்து கூட்டிச் செல்வேன் ; நான் அவர்களை கிலியட் மற்றும் லெபனான் தேசத்துக்குக் கொண்டு வருவேன்; அவர்களுக்கு இடம் கிடைக்காது.
எரேமியா 50:17 – இஸ்ரேல் சிதறிய ஆடு; சிங்கங்கள் அவரை விரட்டியடித்தன: முதலில் அசீரியாவின் ராஜா அவனை விழுங்கிவிட்டான்; கடைசியாக பாபிலோனின் ராஜாவான நேபுகாத்ரேஸர் எலும்புகளை உடைத்துவிட்டார்.
2 இராஜா 18:16 – அந்த நேரத்தில் எசேக்கியா வெட்டி கர்த்தருடைய ஆலயத்தின் கதவுகள் [இருந்து தங்கம்], மற்றும் [இருந்து] இது யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் மேற்பொருத்தப்பட்ட இருந்தது தூண்கள், மற்றும் ராஜா கொடுத்து செய்தார் அசீரியா . ஏசாயா 36: 8
ஆகையால், அசீரியாவின் ராஜாவாகிய என் எஜமானுக்கு நான் உறுதிமொழிகளைக் கொடுங்கள், இரண்டாயிரம் குதிரைகளை உனக்குக் கொடுப்பேன், அவர்கள் மீது சவாரி செய்ய உங்களால் முடிந்தால்.
நெகேமியா 9:32 – ஆகையால், உடன்படிக்கையையும் கருணையையும் காத்துக்கொண்டிருக்கும் எங்கள் தேவன், பெரியவர், வலிமைமிக்கவர், பயங்கரமான கடவுள், எல்லா கஷ்டங்களும் உங்களுக்கு முன்பாகவே தோன்றக்கூடாது, எங்கள்மீது, எங்கள் ராஜாக்கள் மீது, எங்கள் மீது அசீரியா ராஜாக்களின் காலம் முதல் இன்றுவரை பிரபுக்கள், எங்கள் ஆசாரியர்கள், எங்கள் தீர்க்கதரிசிகள், எங்கள் பிதாக்கள், உங்கள் மக்கள் அனைவரின் மீதும் .
மீகா 5: 6 – அவர்கள் அசீரியா தேசத்தை வீணாக்குவார்கள்அதன் நுழைவாயில்களில் வாளாலும், நிம்ரோட் தேசத்தாலும்: அசீரியாவிலிருந்து அவர் நம் தேசத்துக்குள் வரும்போதும், அவர் நம் எல்லைகளுக்குள் மிதிக்கும்போதும் அவர் நம்மை விடுவிப்பார் .
2 கிங்ஸ் 23:29 – அவரது நாட்களில் எகிப்து பார்வோன்நேகோ ராஜா ராஜா எதிராக சென்றார் அசீரியா ஐபிராத்து நதிக்குப் ராஜாவாகிய யோசியா அவனுக்கு எதிராகப் புறப்பட்டான்; அவர் மெகிடோவைக் கண்டதும் அவரைக் கொன்றார்.
ஏசாயா 27:13 – அந்த நாளில் பெரிய எக்காளம் ஊதப்படும், அசீரியா தேசத்திலும், எகிப்து தேசத்திலிருந்தும் அழிந்துபோகத் தயாராக இருந்தவர்களும் வருவார்கள். எருசலேமில் உள்ள பரிசுத்த மலையில் கர்த்தரை வணங்குவார்.
ஏசாயா 36: 2 – அசீரியாவின் ராஜா ஒரு பெரிய படையுடன் ரப்சகேயை லாக்கிஷிலிருந்து எருசலேமுக்கு எசேக்கியா ராஜாவிடம் அனுப்பினார். அவர் முழு வயலின் நெடுஞ்சாலையில் மேல் குளத்தின் வழித்தடத்தில் நின்றார்.
2 இராஜாக்கள் 18:23 – ஆகையால், அசீரியாவின் ராஜாவாகிய என் ஆண்டவருக்கு உறுதிமொழிகளைக் கொடுங்கள், இரண்டாயிரம் குதிரைகளை உனக்கு வழங்குவேன், அவர்கள் மீது சவாரி செய்ய உங்களால் முடிந்தால்.
2 இராஜா 18:28 – அப்பொழுது ரப்ஷாகே நின்று யூதர்களின் மொழியில் உரத்த குரலில் கூப்பிட்டு, “ அசீரியாவின் ராஜாவான பெரிய ராஜாவின் வார்த்தையைக் கேளுங்கள்:
2 இராஜா 19:10- இவ்வாறு நீங்கள் யூதாவின் ராஜாவான எசேக்கியாவிடம் பேசுவீர்கள்: நீ நம்புகிற உன் தேவன் உன்னை ஏமாற்றாதே, எருசலேம் அசீரியாவின் ராஜாவின் கையில் ஒப்படைக்கப்படாது .
ஏசாயா 36:13 – அப்பொழுது ரப்ஷாகே நின்று யூதர்களின் மொழியில் உரத்த குரலில் கூப்பிட்டு, “ அசீரியாவின் ராஜாவான பெரிய ராஜாவின் வார்த்தைகளைக் கேளுங்கள் .
2 இராஜா 15:19 – அசீரியாவின் ராஜாவான புல் தேசத்திற்கு விரோதமாக வந்தான்; மேனாஹேம் புல்லுக்கு ஆயிரம் தாலண்ட் வெள்ளியைக் கொடுத்தான், அவன் கையில் ராஜ்யத்தை உறுதிப்படுத்த அவன் கை அவனுடன் இருக்கும்படி.
2 இராஜா 16: 8- ஆகாஸ் கர்த்தருடைய ஆலயத்திலும், ராஜாவின் வீட்டின் பொக்கிஷங்களிலும் காணப்பட்ட வெள்ளியையும் பொன்னையும் எடுத்து அசீரியா ராஜாவுக்கு பரிசாக அனுப்பினான் .
2 இராஜாக்கள் 18:30 – எசேக்கியா உங்களை கர்த்தரை நம்ப வைக்க வேண்டாம், கர்த்தர் நிச்சயமாக நம்மை விடுவிப்பார், இந்த நகரம் அசீரியாவின் ராஜாவின் கையில் ஒப்படைக்கப்படாது . ஆமென்.
(இந்த வளையங்களைதான் இப்போது வாலிப பிள்ளைகள் ஸ்டைல் ஆக அணிகிறார்கள்)
கன்னியாகுமரி மாவட்டம் 11.12.2019. மாவட்டத்தில் படைக்கல உரிமம் பெற்றவர்கள் துப்பாக்கிகளை உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தங்கள் வசம் வைத்துள்ள உரிமம் பெற்ற துப்பாக்கிகளை அருகில் உள்ள காவல் நிலையத்தில் உள்ள பொறுப்பு அலுவலரிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும். காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்படும் துப்பாக்கிகள் தேர்தல் பணிகள் முடிவுற்ற பின்னர் சம்மந்தப்பட்ட உரிமையாளரிடம் திரும்ப ஒப்படைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் திரு. பிரசாந்த் வடநேரே அவர்கள் தெரிவித்தார்.
All Indian Seafarers, please check your DGS profile by logging with your INDOS Number. If you are one among 3762 Indian Seafarers whose INDOS is deactivated and show cause notice issued, PLEASE REPLY TO DG SHIPPING SOON.
You have 3 options:
If you have attended course and you are truthful, submit statement with all evidences giving information about your course duration, your staying arrangements then , any social media evidences of that time , your teaching faculty or other course members etc. forensic team and DG Shipping team will clear your case.
If you have acquired STCW certificates illegally , state truth. You will get one year suspension.
If you submit in writing that you have down the STCW course for which you have been issued show cause notice and you are guided by Training Institute to submit all lies and fake evidences, then you are in trouble. Forensic experts and DG Shipping team is digging out the truth. You caught lying , 5 Years suspension.
If you have submitted your reply and you didn’t get any acknowledgement by email , please resend email training-dgs@nic.in and submit physical copy and take acknowledgment from DG Shipping.
Only if you have recd email acknowledgment, it means you reply has been registered in DG Shipping file.
Act now and don’t delay reply. If still in doubt and you need any guidance, please ask your seniors , write to DG Shipping on above email or whatsapp me.
This matter was discussed even in Indian Parliament on 05 Dec 2019.
தொடர் மழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 16-ம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில் சில நாட்களாக பெரும்பாலான இடங்களில் கன மழைபெய்து வருகிறது. சென்னையிலும் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தமிழகம் முழுக்க இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் ஆகிய ஆறு மாவட்டங்களில் அதீத கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் காஞ்சிபுரம், கடலூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, திருவள்ளூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
சென்னையைப் பொறுத்தவரையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தைத் தொடர்ந்து கன மழை எச்சரிக்கையை அடுத்து புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் 29.11.2019 மாவட்ட காவல்துறைக்கு தனியாக முகநூல் பக்கம் உள்ளது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இந்த முகநூல் பக்கத்தை முடக்க முயன்று அதில் காவல்துறைக்கு எதிரான தவறான தகவல்களை வெளியிட்டதோடு, காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தி பொது ஊழியரை பணிசெய்யவிடாமல் தடுத்துள்ளனர். இதனை செய்தவர்கள் தக்கலை அருகே கோடியூரை சேர்ந்த ஜெரூன் (38), வினிஷ், பிரைட் சிங், மற்றும் மார்சிலின் என்பது தெரியவந்தது, உடனே தக்கலை காவல் நிலைய தலைமை காவலர் குமாரின் புகாரின் படி காவல் நிலைய ஆய்வாளர் திரு. அருள் பிரகாஷ் அவர்கள் ஜெரூனை கைது செய்து u/s 353 IPC u/s 71 IT Act படி வழக்கு பதிவு செய்தார். ஜெரூன் மாவட்டத்தில் இயங்கி வரும் ஒரு முகநூல் பக்கத்தின் அட்மின் ஆவார். மற்றவர்களை போலீசார் தேடிவருகின்றனர். Social Media Cell Kanyakumari District
JESUS NETWORK TV என்ற முகநூல் பக்கம் முகம் அறியாத சில நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. தற்போது அட்மினால் எந்த பதிவையும் போட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகவே நண்பர்கள் இப்பக்கத்தில் வரும் பதிவுகளுக்கு எந்த வித ஆதரவோ, கருத்தோ பதிவு செய்ய வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
48 மணி நேரத்துக்குள் பக்கத்தை மீட்டெடுப்போம் என்று நம்புகிறோம். ஆகவே நண்பர்கள் சற்று பொறுமை காக்க தாங்கள் பாதம் பணிந்துக் கேட்கிறோம்.
தற்போது வரும் வீடியோவிற்கும் ஜீசஸ் நெட்ஓர்க் டிவி – க்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதையும் தெருவித்துக் கொள்கிறோம்.
நேரு யுவகேந்திரா மற்றும் குலசேகரம் காவல் நிலையம் குமரி அறக்கட்டளை star challenges sports club , ministry of youth affairs & sports, ஜெய்ஹிந்த் குரூப்ஸ் ,GVS ஜூவல்லரி இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு மற்றும் தலைகவச விழிப்புணர்வு இரு சக்கர வாகன பேரணி குலசேகரம் முதல் மரியா கல்லூரி ஆற்றுர் வரை நடைபெற்றது
நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது”. (யாக்.5:16)
கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக. சில தினங்களுக்கு முன்பாக ஒரு சகோதரி சிவகாசியில் இருந்து என்னை தொலைபேசியில் அழைத்திருந்தார். அந்த சகோதரி தனக்கு தெரிந்த தென்காசியில் வசிக்கும் சகோதரி ஒருவரின் குழந்தை பாக்கியத்திற்காக ஜெபிக்கும் படியாக கேட்டிருந்தார். நாம் செய்து வருகின்ற அன்னாளின் ஜெபத்தில் கடந்த வாரத்திலிருந்து பங்கெடுத்து உபவாசித்து ஜெபித்து வந்துள்ளார். தென்காசியில் வசிக்கும் சகோதரி நமது அனுதின செய்திகளை படிப்பவரா என்று தெரியவில்லை. ஆனால் அவருடைய பெயரைக் கொடுத்த சகோதரி அவருக்காக ஐந்து நாட்கள் உபவாசித்து ஜெபித்துள்ளார். கர்த்தர் இந்த ஜெபத்தின் சத்ததைக் கேட்டு தென்காசியில் வசிக்கும் சகோதரிக்கு கர்ப்பத்தின் பாக்கியத்தை கொடுத்து ஆசிர்வதித்துளார்.
உலகத்தில் பலவிதங்களில் ஒருவருக்கொருவர் உதவி செய்ய முடியும். அதைப்போல ஒரு பலசாலி பலவீனமானவனுக்கு உதவி செய்ய முடியும். அதைப்போலவே ஆள்பலம் கொண்டவர் தன்னுடைய பலத்தினால் மற்றவர்களுக்கு அரசாங்கத்தில் சிபாரிசு செய்ய முடியும். அதைப்போலவே பல பட்டங்களை பெற்ற அறிவுள்ளவர்கள் படிப்பறிவில்லாத மக்களுக்கு கல்வி உதவியை அருள முடியும். இவை அனைத்திலும் மிக முக்கியமான பேருதவி ஜெப உதவி ஆகும். இந்த ஜெப உதவியை யாரால் செய்ய முடியும்? ஜெபிக் கிறவர்கள், அதாவது ஜெபத்தின் மேல் விசுவாசமும் ஆண்டவர் பேரில் முழு நம்பிக்கையும் உடையவர்களே.
நீங்கள் ஒரு பெரிய ஐசுவரியவானாக அல்லது பெரிய அந்தஸ்து உடையவர்களாக இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கலாம். ஆனால் அதே வேளையில் நீங்கள் தனிமையில் முழங்காலில் நின்று, ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, ஒருவருக்காக ஒருவர் ஜெபிப்பீர்கள் என்றால் பரலோக தேவன் உங்களை விசேஷித்தவர்களாகக் காண்பார். நீங்கள் பாக்கியவான்களாக இருப்பீர்கள். மேலும், உங்கள் ஜெபம் ஏராளமான ஆசீர்வாதங்களை பரலோகத்திலிருந்து கொண்டு வரும். நீங்கள் இனியும் தாமதிக்காமல் ஒருவருக்கொருவர் ஜெபிக்க உங்களை அர்ப்பணியுங்கள். நிச்சயமாக தேவன் உங்களை ஆசீர்வதிப்பார். அநேகருக்கு நீங்கள் ஆசீர்வாதமாய் இருப்பீர்கள்.
பொது இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் அனுமதி இல்லாமல் வைத்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஓரு ஆண்டு சிறை தண்டனையும் ஐயாயிரம் ரூபாய் (5000/-) அபராதமும் விதிக்கப்படும். கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் திரு.பிரசாந்த் வடநேரே அவர்கள் உத்தரவு…………
கன்னியாகுமரி மாவட்டத்தில் காவலர்களின் மன அழுத்தத்தை போக்குவதற்கு காவலர் நிறை வாழ்வு பயிர்ச்சி நடைபெறுகிறது. அதில் 30 வது மற்றும் 31 வது கட்ட பயிர்சியை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி திரு அப்துல் காதர் மற்றும் மதுவிலக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு விஜயபாஸ்கர் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்
இப்படியும் சில அதிகாரிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்….
வீரவநல்லூர் காவல் நிலைய ஆய்வாளராக பணிபுரிபவர் திரு. சாம்சன் அவர்கள்.. என்ன செய்தார் இவர்?…..
காவல் நிலைய ஆய்வாளராக வந்த பின் ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் சாலைகளில் இருந்த இடையூறுகளை அகற்றினார்…..
பல இடங்களில் புதிதாக மரங்கள் பல
நட்டுள்ளார்…..
மரம் நடுவதில் ஆர்வமுள்ள தன்னார்வலர்களை ஊக்குவித்துள்ளார்…
காவல் நிலையத்தில் பல மாற்றங்களை செய்துள்ளார் .
இயற்கை மேல் கொண்ட பாசத்தால் மரங்களில் ஆணி அடித்து செய்யப்பட்ட விளம்பரங்களை தன்னார்வலர்களுடன் இணைந்து அகற்றியுள்ளார்…..
சிரட்டைகளில் கூண்டுகள் செய்து அதனை மரங்களிலும் கூடு தேடும் இடங்களிலும் பொருத்தி வருவதோடு இதை செய்ய மாணவர்களிடம் விழிப்புணர்வு ஊட்டி வருகிறார்…..
அவர் போகும் வழியில் ஏதேனும் பள்ளி தென்பட்டால் வாகனத்தை நிறுத்தி பாலிதீன் கவர்கள் குப்பைகள் அகற்றவேண்டிய விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஊட்டுவதோடு தனது வாகனத்தில் எப்போதும் வைத்திருக்கும் குப்பைதொட்டியில் குப்பைகளை சேகரிக்க அறிவுறுத்தி சாக்லெட் பரிசு வழங்குகிறார்…..
சென்று கொண்டிருக்கும் போதே சாலைகளில் வெற்றிடமிருந்தால் அங்கு வாகனத்தை நிறுத்தி மரக்கன்றுகள்
நட்டு செல்கிறார்…
ஆடம்பரமாக விழா கொண்டாட்டம் அனுமதி கேட்பவர்களிடம் கனிவாய் பேசி
கல்வி உபகரணங்களை தங்கள் பகுதி மாணவர்களுக்கு வழங்கவும் அறிவுறுத்துகிறார்…..
காவல் நிலையத்தில் பசுமை விரும்பி பல ஜாடிகளில் பசுமை செடிகள் காவல் நிலையத்தில் வைத்துள்ளார்…..
மேலும் இவர் இதுவரை 25 முறைக்கு மேல் இரத்த தானம் கொடுத்துள்ளார்…..
இவையனைத்தும் எந்த விளம்பரத்தினையும் எதிர்பார்க்காமல் செய்து வருகிறார்…..
உண்மையில் இப்படி சிலர் இருப்பதால் தான் இன்னும் இயற்கை அன்னை வாழ்கிறாள்…
இயற்கை அன்னையின் வளம் காக்க
இவர் செய்யும் முயற்சிகளில் இது துளி அளவே
இன்னும் பதிவிட முடியாமல் இருப்பது அதிகம்…..
வெளியே தெரியாமல் செய்வது
இவர் நோக்கம் என்றாலும்
இவர்கள் போன்ற சமூக ஆர்வலர்களை வெளி உலகிற்க்கு வெளிப்படுத்துவது நம் கடமையாகும்
இவர்கள் போன்று அனைத்து
அரசு ஊழியர்களும்
தன் கடமையோடுசேர்த்து சமூக சிந்தனையோடு
வாழ்ந்தால் வறுமை இல்லாத தமிழகம்…..
கல்லாதவர் இல்லாத தமிழகம்.
சுகாதாரமான வளமான தமிழகம் அமைவதற்கு வெகுதூரமில்லை….
இவரைப் போன்ற காவலர்கள் மக்கள் மனதில் என்றும் நிலையான இடத்தை பிடிப்பவர் ஆவார்…
இவரைச்சுற்றி பல இளைஞர் பட்டாளம் உண்டு என்பது குறிப்பிடதக்கது.
கிறிஸ்து பிறப்பதற்கு முன் 8 ஆம் நூற்றாண்டில் (கி.மு.800 – 700) யூதாவில் பிறந்து வடக்கு தேசமாகிய இஸ்ரவேல் தேசத்திற்கு தீர்க்க தரிசனம் உறைத்தவர் தான் இந்த ஆமோஸ் என்னும் தீர்க்கதரிசி. “ஆமோஸ்” என்றால் “சுமை சுமப்பவர்” என்று பொருள்படும். இறைவாக்கு உரைக்கும்படி கடவுளிடமிருந்து அழைப்பு பெறுவதற்கு முன்னர், ஆமோஸ் ஆட்டு மந்தைக்கு உரிமையாளராகவும், காட்டு அத்திமரத் தோட்டம் பயிரிடுபவராகவும்இருந்தார். “நான் தீர்க்கதரிசியுமல்ல, தீர்க்கதரிசியின் புத்திரனுமல்ல; நான் மந்தை மேய்க்கிறவனும், காட்டத்திப்பழங்களைப் பொறுக்குகிறவனுமாயிருந்தேன்” (ஆமோஸ் 7:14) என்று அவரே தம்மை அடையாளம் காட்டுகிறார்.
எப்படி ஆடுமேய்த்த தாவீதை கர்த்தர் அரசனாக்கினாரோ அதே போல தான் ஆடுமேய்த்த ஆமோசையும் கர்த்தர் தீர்க்கதரிசியாய் மாற்றினார். இவர் மேய்ப்பனின் குணாதிசயத்தை அழக்காக ஆமோஸ் 3:12 -ல் கூறி இருக்கின்றார். “ஒரு மேய்ப்பன் இரண்டு கால்களையாவது ஒரு காதின் துண்டையாவது சிங்கத்தின் வாயிலிருந்து பிடுங்கித் தப்புவிக்குமாப்போல” என்று. இந்த வசனத்தின் பொருள் என்னவென்றால் மேய்ப்பனானவன் எந்த சூழ்நிலையிலும் கொடிய விலங்கிடம் அகப்பட்ட ஆட்டை காப்பாற்ற வேண்டும். தாவீது கூட சிங்கத்திடமிருந்தும் கரடியிடமிருந்தும் மந்தையை காத்துள்ளதை 1 சாமுவேல் 17-34,35 – ல் வாசிகின்றோம். தாவீது தனது ஜீவனையும் பொருட்படுத்தாமல் மந்தையை காப்பாற்றின காரணத்தினால் தான் தேவன் தாவீதை ராஜாவாக உயர்த்தினார்.
சிங்கம் பிடித்து விட்டதே. இனி அந்த ஆடு பிழைக்காது என்று விட்டுவிட்டு செல்லாமல் முடிந்த அளவு போராடி கால்களையாவது அல்லது காதின் துண்டுகளையாவது காப்பற்ற வேண்டுமென்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. அப்படிப்பட்டவர்கள் தான் உண்மையான மேய்ப்பர்கள். ஓவ்வொரு இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவனுக்கும் ஒரு மந்தையை தேவன் கொடுத்துள்ளார். அதாவது ஒரு கூட்ட ஜனங்களை பரலோகத்திற்கு நேராய் நடத்தும் படியாக நம்மிடம் கொடுத்துள்ளார். அந்த மக்கள் பிசாசினால் வஞ்சிக்கப்பட்டு பாவத்தில் விழுகையில் அவர்கள் அவ்வளவுதான் என்று அவர்களை வஞ்சித்த பிசாசின் கைகளில் முற்றிலும் விட்டு விடாமல், மேய்ப்பர்களாகிய நாம்தான் பிசானவனோடு போராடி அவர்களை மீட்க வேண்டும்.
யோவான் 10 அதிகாரம் 14.-15 -ல் இயேசு சொல்கிறார், நானே நல்ல மேய்ப்பன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்” என்று. இயேசுவின் சிலுவையில் ஜீவன் தந்து நாம்மை காப்பாற்றியதால் தான் இன்றைக்கு நாம் விடுதலையுடன் வாழ்கின்றோம். அந்த இயேசு நம்மிடம் கொடுத்துள்ள சிறு மந்தையை கவனமோடு பாதுகாக்கும் பொறுப்பை நம் கையில் கொடுத்துள்ளார். ஆதலால் விழிப்போடு இருந்து மந்தையை காப்போம். பரலோகம் சேர்ப்போம். கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக. ஆமேன்.
நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படியத்தக்கதாக, சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக. ரோமர் 6:12.
ஒரு தேவ செய்தியாளர் பாவத்தின் பயங்கரத்தைக் குறித்து சபையாரைக் கடுமையாய்க் கண்டித்துணர்த்திப் பேசினார். அதைக் கேட்டுக்கொண்டிருந்த விசுவாசிகள் ஆராதனையின் முடிவில் அவரிடம் சென்று, ஐயா, நீங்கள் இவ்வளவு காரசாரமாகவும், வெளிப்படையாகவும் பாவத்தைக் குறித்துப் பகிரங்கமாய்ப் பேசவேண்டியதில்லை. காரணம் எங்களுடைய வாலிபப் பையன்களும் பெண்களும் பாவங்களைக் குறித்து வெளிப்படையாய் அறிந்துகொண்டால் அவர்கள் வெகு எளிதில் பாவிகளாகிவிடுவார்கள். வேண்டுமானால் பாவத்தைப் பாவம் என்று சொல்லாது, அதனை ஒரு குற்றம் என்று சொல்வீராக. ஆனால் பாவத்தைக் குறித்து இவ்வளவு பகிரங்கமாய்ப் பச்சையாகப் பேசவேண்டாம் என்றனர்.
உடனே அந்த தேவ செய்தியாளர் தன்னுடைய மருந்துப் பெட்டியில் நஞ்சு என்று தீட்டப்பட்டிருந்த ஒரு விஷ மருந்தை எடுத்து வந்து, அவர்களிடம் காட்டி, நஞ்சு என்று தீட்டப்பட்ட சீட்டை இந்த மருந்துப் புட்டியிலிருந்து எடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக தேன் என்ற பெயரை அல்லது யாவரும் விரும்பும் இன்னொரு இனிய பெயரை, அதே நஞ்சு நிறைந்த புட்டியின்மேல் எழுதலாமா? என்று கேட்டார். அப்படி எழுதினால் அந்த நஞ்சை அநேகர் சாப்பிட்டு மரிப்பார்களே. ஆகவே அப்படி எழுதலாகாது என்றனர் விசுவாசிகள். ஆம். நஞ்சை எவ்வளவு தூரம் இனிப்பான மருந்து என்று எழுதுகிறேனோ அவ்வளவு தூரம் ஆபத்தாக முடியும் என்று கூறினார் அந்த தேவ செய்தியாளர்.
நஞ்சு நஞ்சுதான். நஞ்சுதனை நஞ்சு என்று வெளியரங்கமாய், தெளிவாக வெகு திட்டவட்டமாய்க் கூறாவிட்டால் ஆபத்து நேரிடும். அது வஞ்சகமாகும். உள்ளதை உள்ளதென்று சொல்லவேண்டும். இல்லாததை இல்லாததென்று சொல்லவேண்டும். பாவத்தைப் பாவம் என்று சொல்லிப் பகிரங்கமாய்க் கண்டித்துணர்த்த வேண்டும். பாவத்தைக் குறித்து ஏனோதானோவென்று அசட்டையாயிருக்கிறவர்கள் மோசம் போவது நிச்சயம். தற்காலத்தில் பாவத்தின் பயங்கரத்தையும் ஆபத்தையும் நாம் சரியாய் உணருகிறதில்லை. பாவம் மனிதனைக் கொல்லும் தன்மையுடையது. இக்கொடிய பாவத்தைப் பாவம் என்று வெளிப்படையாய்க் கூறாது, தற்காலத்தில் அதனை இலேசாக மதித்து, அப்பாவத்தோடு விளையாடி, அப்பாவத்தை இயற்கையான குற்றமென்றும், மனித பலவீனமென்றும், ஏதோ தவறுதல் என்றும் இலேசாக அதனைச் சாக்குப்போக்குச் சொல்லி நிர்விசாரமாக இருந்துவிடப் பார்க்கிறோம்.
சத்திய வேதாகமம் பாவத்தின் பயங்கரத்தையும், பாவம் விளைவிக்கும் மரணத்தையும் வெகு திட்டவட்டமாய் வெளிப்படுத்தியிருப்பதுபோல, நாமும் பாவத்தைப் பாவம் என்று கூறிப் பகிரங்கமாய் முகதாட்சண்யமின்றி கண்டித்துணர்த்த வேண்டும். சாவுக்கேதுவான இந்த சரீரத்தின் இச்சைகளின்படி நாம் பாவத்திற்குக் கீழ்ப்படியக்கூடாது. பாவம் நம்மை ஆளாதிருப்பதாக. “இப்பொழுது உங்களுக்கு வெட்கமாகத் தோன்றுகிற காரியங்களினாலே அக்காலத்தில் உங்களுக்கு என்ன பலன் கிடைத்தது? அவைகளின் முடிவு மரணமே. இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன். பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன். (ரோமர் 6:21-23). பாவத்தின் ஆளுகைக்குள் சென்று மரணத்தை ருசிபார்ப்பதை விட, பரிசுத்தத்தின் ஆளுகைக்குள் இருந்து நித்தியஜீவனை பெறுவதே மேன்மை. ஆமென். அல்லேலுயா.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு குமரி மாவட்டத்துக்கு 11-ந் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கி கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டார்.
குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஓணம் பண்டிகையை முன்னிட்டு வருகிற 11-ந் தேதி (புதன்கிழமை) குமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.
அன்று குமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளை கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களை கொண்டு இயங்கும்.
இந்த விடுமுறைக்கு ஈடாக வருகிற 14-ந் தேதி (இரண்டாவது சனிக்கிழமை) குமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
☀ மூல மொழியாகிய எபிரேயத்தில் “நேகம் (Nachum)” என்று அழைக்கப்படுகிறது.
☀ நாகூம் என்றால் “ஆறுதலளிப்பவன்.” (consolation)” என்று அர்த்தம்.
☀ தன் பெயரின் அர்த்தத்திற்கு இசைவாக நாகூம், கடவுளுடைய ராஜ்யத்துடன் வரும் சமாதானத்தையும் இரட்சிப்பையும் தேடுவோர் யாவருக்கும் மிகுந்த ஆறுதலை அளிக்கிறார்.
☀ நம்முடைய பரிசுத்த வேதாகமத்திலே 34-வது புத்தகமாக வருகிறது.
☀ யோனாவைப் போலவே நாகூம் அசீரிய சாம்ராஜ்யத்தின் தலைநகரான நினிவேக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தான். கி.மு.663-612 வரை தீர்கதரிசன ஊழியம் செய்தான்.
☀ ஒரு நூற்றாண்டுக்கு முன்பு நினிவே மனந் திரும்பியதை யோனா பார்த்திரான். ஆனால் அந்தப் பட்டணம் மறுபடியும் துன்மார்க்கத்தில் விழுந்து விட்டது.
☀ “நினிவேக்கு எதிரான கண்டன அறிவிப்பு.” (நாகூ.1:1) அச்சந்தரும் இந்த வார்த்தைகளோடு நாகூம் தீர்க்கதரிசனம் உரைக்க ஆரம்பிக்கிறார். ‘இரத்தப்பழிகளின் நகரம்’ என்ற இரண்டே வார்த்தைகளில் அதன் சரித்திரத்தை நாகூம் கூறுகிறார். (3:1)
☀ வட ஈராக்கில் உள்ள தற்கால நகரமாகிய மோசுலுக்கு எதிரே, டைகிரீஸ் நதியின் கிழக்குகரையில் அமைந்த இரண்டு மண் மேடுகளே பூர்வ நினிவே இருந்த இடத்தைக் குறிக்கின்றன. அதில் மதில்களும் அகழிகளும் நிறைந்திருந்ததால் பலத்த பாதுகாப்புமிக்க பட்டணமாக இருந்தது.
☀ பிற்காலத்தில் அசீரிய பேரரசின் தலை நகரமாகவும் சேவித்தது. எனினும், இந்த நகரம் நிம்ரோதின் நாட்களில் உருவானது. அவன், “கர்த்தருக்கு விரோதமான பலத்த வேட்டைக்காரன்… இவன் அசீரியாவிற்குள் சென்று நினிவேயைக் கட்டினான்.” (ஆதி.10:9-11)
☀ இவ்வாறு நினிவேயின் ஆரம்பமே மோசமானதாக இருந்தது. சர்கோன், சனகெரிப், எசரத்தோன் மேலும் அசீரிய பேரரசின் முடிவு காலத்தில் ஆண்ட அஷுர்பானிப்பால் ஆகியோரின் ஆட்சி காலத்தில் இது அதிக புகழ்பெற்றது.
☀ போர்கள், நாடுகளைக் கைப்பற்றுதல் ஆகியவை மூலம் கிடைத்த கொள்ளைப் பொருட்களால் அது செல்வ செழிப்பு உள்ள நாடானது. மேலும் சிறைபிடித்த ஏராளமான கைதிகளை கொடூரமாக, மனிதத் தன்மையற்ற விதத்தில் நடத்தியதற்கு அதன் அரசர்கள் பேர் பெற்றிருந்தனர்.
☀ நினிவே இரத்தப் பழிகளின் நகரம் என்று அழைக்கப்படுகிறது (3:1).
☀ கொடூரம் நிறைந்த நகரம் (3:19). அசீரியர்கள் தங்கள் பொல்லாத நினைவுகள் (1:11) ,விக்கிரகாராதனை (1:14), கொலை, பொய்கள், நம்பிக்கைத் துரோகம் சமூக அநீதிகள் (3:1-19), ஆகியவற்றுக்காக நியாயந் தீர்க்கப் பட்டனர்.
☀ ஒரே பொருளைப் பற்றி பேசுவதால் நாகூமின் எழுத்துநடை இன்னும் சிறப்படைகிறது. இஸ்ரவேலின் நம்பிக்கை துரோக எதிரியை அவர் அறவே வெறுக்கிறார். நினிவேயின் அழிவுதான் அவர் கண்முன் நின்றது.
☀ மொத்தம் 3 அதிகாரங்களும், 47 வசனங்களையும் கொண்டுள்ளது.
☀ 3-வது அதிகாரம் பெரிய அதிகாரமாகவும், 1-வது அதிகாரம் சிரிய அதிகாரமாகவும் உள்ளது.
☀ முதல் அதிகாரத்தின் பெரும் பகுதி அகரவரிசை செய்யுள் (acrostic poem) நடையில் இருப்பதாக தோன்றுகிறது. (1:8)
☀ நாகூம் தீர்க்கதரிசனம் துல்லியமாக நிறைவேறியதே அதன் நம்பகத் தன்மையை நிரூபிக்கிறது.
☀ நாகூமின் நாளில், அசீரிய உலக வல்லரசின் அகந்தை வாய்ந்த தலைநகர் ‘ஆறுகளின் மதகுகளில்’ திறக்கப்பட்டு அதன் அரண்மனை கரைந்து போய், அது ‘வெறுமையும், வெட்டவெளியும், பாழுமாகும்’ என்று கர்த்தருடைய தீர்க்கதரிசியை தவிர வேறு யாரால் அவ்வளவு தைரியத்துடன் முன்னறிவித்திருக்க முடியும்? (2:6-10)
☀ இதைப் பின்தொடர்ந்த சம்பவங்கள், இந்தத் தீர்க்கதரிசனம் நிச்சயமாகவே கர்த்தரால் கொடுக்கப்பட்டது என்று காட்டின. மேதியரும் பாபிலோனியரும் நினிவேயைக் கைப்பற்றியதைப் பாபிலோனிய அரசன் நெபோபொலேசாரின் பதிவேடுகள் பின்வருமாறு விவரிக்கின்றன:
☀ “(அவர்கள்) நகரத்தை பாழாக்கப்பட்ட குன்றுகளாகவும் (குப்பைக் கூளங்களாகவும் ஆக்கினார்கள்…).” நினிவே அவ்வளவு முழுமையாக அழிக்கப்பட்டதால் பல நூற்றாண்டுகளாக அது இருந்த இடம்கூட தெரியாமல் இருந்தது.
☀ இதை வைத்துக் கொண்டு குறைகாண்போர் சிலர், நினிவே ஒருபோதும் இருந்திருக்க முடியாதென்று சொல்லி வேதாகமத்தை ஏளனம் செய்தனர்.
☀ எனினும், நினிவே இருந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டு 19-ம் நூற்றாண்டில் அங்கே ஆராய்ச்சிகள் தொடங்கப்பட்டன. இதுவும் நாகூமின் நம்பகத்தன்மைக்கு கூடுதலான அத்தாட்சியைக் கொடுக்கிறது.
☀ அதை முழுமையாக தோண்டியெடுக்க வேண்டுமென்றால் பல லட்சக்கணக்கான டன் மண்ணை நீக்க வேண்டியிருக்கும் என மதிப்பிடப்பட்டது.
☀ நினிவேயில் என்ன தோண்டியெடுக்கப்பட்டது?நாகூம் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தை ஆதரிக்கும் அநேக காரியங்கள் கிடைத்தன! உதாரணமாக, அங்கு கிடைத்த நினைவுச் சின்னங்களும் கல்வெட்டுகளும் அதன் கொடூரத்திற்கு சாட்சி பகருகின்றன.
☀ சிறகுகளுள்ள காளைகள் மற்றும் சிங்கங்களின் பெரும் சிலைகளின் பகுதிகளும் உள்ளன. நாகூம் அதைச் “சிங்கங்களின் வாசஸ்தலம்” என்று கூறியதில் ஆச்சரியம் எதுவும் உண்டோ? (2:11).
☀ தற்காலத்துப் போக்குவரத்தைப் பற்றி 2700 ஆண்டுகளுக்கு முன்பே முன்னறிவிக்கப்பட்டது இப்புத்தகத்தின் மூலமே. (நாகூம் 2:4).
The U.S. Coast Guard rescued 25 fishing boat crewmen and 12 Coast Guardsmen after the fishing boat they were aboard capsized and sank approximately 336 nautical miles southeast of Clipperton Island in the Eastern Pacific Ocean, on Wednesday.
The Coast Guardsmen were conducting a routine boarding of the 160-foot Ecuadorian fishing vessel Marujita when it began listing and became unsafe to remain on board. All on board abandoned ship.
A boat crew from a Coast Guard cutter quickly rescued 16 of the fishing vessel crew and Coast Guard members while 20 others climbed up nets hung from the side of the cutter. One Marujita crewman clung to the hull of the sinking vessel until he was rescued by the cutter’s rescue swimmer.
“Fast action by the cutter’s crew resulted in a remarkable mass rescue in a dangerous and challenging situation,” said Capt. Arthur Snyder, chief of operations for the 11th Coast Guard
District. “Their decisive response reflects their training and dedication, and shows the types of dangers faced by Coast Guard crews deployed around the world protecting our nation.”
The cutter was in the region conducing a law enforcement patrol. There were no reported injuries. The cause of the incident is under investigation.
compman
source : The Maritime Executive
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் குந்தா அணை நிரம்பியது. குந்தா அணை நிரம்பி, தண்ணீர் திறந்துவிடப்படுவதால் கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பைகாரா அணையில் இருந்து மாயாற்றில் நீர் திறந்துவிடப்படுவதால் மசினகுடி, தெங்கு மரஹாடா ஆகிய இடங்களிலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
திருவனந்தபுரம்: கனமழை பெய்யக்கூடும் என கேரளா மாநிலத்தின் இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ஜூன் முதல் வாரம் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை பெய்யும். இந்த வருடம் 1 வாரம் தாமதமாக மழை தொடங்கியது. அதோடு எதிர்பார்த்த அளவும் பெய்யவில்லை. கடந்த 2 வாரத்தில் வழக்கமாக பெய்வதை விட 31 சதவீதம் மழை குறைவாக பெய்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் கோழிக்கோடு, கண்ணூர் உள்ளிட்ட வடமாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
நேற்று எர்ணாகுளம், இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மாவட்டங்களில் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. வயநாடு மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இன்று இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ‘ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டத்தில், பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவிலும் ரெட் அலெர்ட்:
கர்நாடக மாநிலத்தின் வட பகுதிகள் வெள்ளத்தில் மிதப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதித்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் வட மாவட்டங்களான பெலகாவி உள்ளிட்ட மாவட்டங்கள் முற்றிலும் வெள்ளத்தில் மிதக்கின்றன. பெலகாவி நிப்பாணி தாலுகாவில் தேசிய நெடுஞ்சாலை, வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. கிராம சாலைகளும் நாசமாகி விட்டன. வட கர்நாடகத்தில் உள்ள பெரும்பான்மை கிராமங்களும், நகரங்களும் வெள்ளத்தில் மிதக்கின்றன.
கொய்னா உள்ளிட்ட அணைகளில் இருந்து 1 லட்சம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் வட கர்நாடக பகுதிகள் தண்ணீர் தேசமாக மாறி விட்டன. பெலகாவி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. அது தவிர ஆயிரக்கணக்கான மரங்கள் மட்டும் இன்றி மின்சார கம்பங்கள் உள்ளிட்டவையும் சாய்ந்து விழுந்தன. ஒட்டு மொத்தமாக கர்நாடக மாநிலத்தின் வட மாவட்டங்கள், மலைநாடு பகுதிகளில் வயல் பகுதிகள் அனைத்தும் தண்ணீர் தண்ணீர் தண்ணீர்தான். இதற்கிடையே, குடகு மாவட்டத்திற்கும் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
1942-ல் இங்கிலாந்து தேசத்தில் C.S. லூயிஸ் (C.S. Lewis) என்பவரால் “ஸ்குருடேப் கடிதங்கள்” (The Screwtape Letters) என்ற கிறிஸ்துவ நாவல் வெளியிடப்பட்டது. அந்த புத்தகத்தில் ஸ்குருடேப் என்ற மூத்த பிசாசு, வார்ம்வுட் (Wormwood) என்ற இளைய பிசாசுக்கு, ஒரு கிறிஸ்துவனை விசுவாசத்திலிருந்து விழவைக்கலாம் என்பதை கடிதம் மூலமாக அறிவுரை கூறுவதாக உள்ளது. ஒருநாள் வார்ம்வுட் என்ற இளம் பிசாசு ஒரு விசுவாசியை பாவத்தில் விழச்செய்ததின் நிமித்தமாக மிகுந்த சந்தோஷத்தில் இருந்தது. உடனடியாக ஸ்குருடேப் என்ற மூத்த பிசாசுக்கு கடிதம் மூலம் அதைத் தெரிவித்தது.
அதற்க்கு ஸ்குருடேப் என்ற மூத்த பிசாசு, “ஏமாற்றப்பட்டு விடாதே வார்ம்வுட். நீ பாவத்தில் விழச்செய்த அந்த விசுவாசிக்கு, இந்த அண்டசராசரத்தில் தேவனைப் பற்றிய அனைத்து அடையாளங்களும் மறைந்து விட்டதுபோல் காணப்பட்டாலும், தேவன் அவனை ஏன் கைவிட்டுவிட்டார் என்ற கேள்வியை தனக்குள்ளே கேட்டுக்கொண்டாலும், தேவனுக்கு கீழ்ப்படிகிறவனாக அவன் இருந்தால் நாம் எடுக்கும் முயற்சிகள் பயனற்றதாகிவிடும்” என்று கூறுகின்றது.
ஆம் இயேசுவுக்கு பிரியமானவர்களே, ஒருவேளை கைவிடப்பட்ட சூழ்நிலையில் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கலாம். ஆனால் இயேசுவுக்கு கீழ்ப்படிகின்றவர்களாக வாழ வேண்டும். கைவிடப்பட்டு விட்டோம் என்று உணர்ந்த நிலைமையிலும், விசுவாசத்துடன் செயல்பட்ட அநேக மக்களைப் பற்றி வேதாகமம் கூறுகிறது. ஆபிராமிற்கு ஒரு புத்திரனை அருளுவேன் என்று தேவன் அவனிடம் கூறின வாக்குத்தத்தம் நிறைவேறவில்லையே என்று அவன் எண்ணினான். (ஆதி 15:2-3) சங்கீதக்காரன் அவனுடைய உபத்திரவங்கள் மத்தியில் தேவன் அவனை மறந்துவிட்டதாக எண்ணினான். (சங் 10:1) தேவன் அவனை கொன்றுவிடுவாரோ என்று எண்ணும் அளவிற்கு யோபின் துன்பங்கள் மிக அதிகமாக இருந்தன. (யோபு 13:15).
இயேசு சிலுவையிலிருந்து “என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று கதறினார். (மத்தேயு 27:46) ஆயினும் மேற்கூறிய அனைத்து நிகழ்ச்சிகளிலும் தேவன் உண்மையுள்ளவராகவே இருந்தார் (ஆதி 21:1-7, சங் 10:16-18, யோபு 38:1-42 : 17, மத் 28:9-20) நீங்கள் தேவனால் கைவிடப்பட்டுவிட்டீர்கள் என்று நீங்கள் எண்ணும்படி சாத்தான் சோதித்தாலும், தேவன் உங்கள் அருகிலேயே இருக்கிறார். அவருக்கு சொந்தமானவர்களை தேவன் ஒருக்காலும் கைவிடுவதில்லை.“நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதுமில்லை” (எபிரேயர் 13:5) என்று தேவன் சொல்லிருக்கிறார். ஆகவே நாம் “கர்த்தர் எனக்குச் சகாயர், பயப்படேன்” (வச. 6)என்று தைரியமாக அறிக்கை செய்து ஜெபியுங்கள். கர்த்தர் உங்களை வழிநடத்துவார்.
திண்டுக்கல் முத்தழகுபட்டி புனித செபஸ்தியார் ஆலய திருவிழாவில் 1,350 ஆடு, 1400 சேவல் பலியிட்டு சாதி, மத பேதமின்றி விடிய, விடிய அன்னதானம் வழங்கப்பட்டது. திண்டுக்கல் முத்தழகுபட்டியில் உள்ள புனித செபஸ்தியார் ஆலய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் நடக்கும். இதையொட்டி பிரமாண்டமாக அசைவ விருந்து தயாரித்து பொதுமக்களுக்கு அன்னதானம் விடிய, விடிய வழங்கப்படும். இந்தாண்டு திருவிழா கடந்த ஆக.4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான அசைவ விருந்து அன்னதானம் நேற்று துவங்கியது. இதற்காக பொதுமக்கள் நேர்த்திக்கடனாக கொடுத்த 1,350 ஆடுகள், 1,400 சேவல்கள், 750 கிலோ அரிசி, 2 டன் காய்கறிகள் கொண்டு உணவு சமைக்கப்பட்டது. தொடர்ந்து மாலை 7 மணிக்கு ஆரம்பித்த அன்னதானம் விடிய, விடிய நடந்தது. இதில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் மட்டுமின்றி, பல்வேறு வெளியூர், வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து முத்தழகுபட்டி மக்கள் கூறுகையில்,
‘‘புனித செபஸ்தியார் ஆலய திருவிழா 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. பாரம்பரியமாக மண் அடுப்புகளில் ராட்சத பாத்திரங்களை வைத்து உணவு தயாரிக்கப்படும். இங்கு பலி கொடுக்கப்படும் ஆடு, கோழி இறைச்சி இஸ்லாமிய மோதினார் மூலம் ஹலால் செய்யப்பட்டு, அதன்பின் சமைத்து சாதி, மத பேதமின்றி அனைவருக்கும் பரிமாறப்படும்’’ என்றனர்….
நாகர்கோவில் வடசேரி மீன் சந்தை எதிரே அரசு பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து…
அதிர்ஷ்டவசமாக பைக்கை ஓட்டி வந்தவர் உயிர் தப்பினார்….
டிரைவரை தாக்க பொதுமக்கள் முயன்றதால் பரபரப்பு….
📸 #Jackson_Herby
கேரளாவில் வரும் 8 ஆம் தேதி 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், 6ஆம் தேதி முதல் 9 வரை ஆரஞ்ச் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் வரும் 8 ஆம் தேதி 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், 6ஆம் தேதி முதல் 9 வரை ஆரஞ்ச் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பகுதிகளில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கவும், துறை அதிகாரிகள் முன்னேற்பாடுகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். வரும் நாட்களில் கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் கேரள முதலமைச்சர் இந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளார் ...
உசியா அரசனானபோது அவனுக்கு பதினாறு வயது மட்டுமே (2 நாளா.26:1). இத்தகைய இளைஞன் ஒரு அரசின் பொறுப்பை எவ்வாறு வகிக்க முடியும்? யூத மக்களுடைய பொருளாதாரம், போக்குவரத்து, வீட்டுவசதி மற்றும் பொதுநலன் போன்றவைகளைக் கவனித்துப் ஞானமாய் செய்ய வேண்டிய முக்கியமான பணி. ஆயினும் இளைஞனான உசியா அரசன் யூத நாட்டின் எல்லையை விரிவாக்கி, எதிர்களை வென்று, எகிப்து வரை தனது புகழ் பரவும் படியான சிறப்பாக ஆட்சி செய்தார்.
எப்படி ஒரு இளைஞனால் ஒரு நாட்டையே வளர்ச்சியின் பாதையில் கொண்டு செல்ல முடிந்தது? வேதம் சொல்கிறது, அவன் தேவனுடைய இரக்கத்திலும் கிருபையிலும் சார்ந்து வாழ்ந்தான். தேவனுடைய தரிசனங்களில் புத்திமானாயிருந்த சகரியாவின் நாட்களிலே தேவனைத் தேட மனதிணங்கியிருந்தான். அவன் கர்த்தரைத் தேடின நாட்களில் தேவன் அவன் காரியங்களை வாய்க்கச் செய்தார் (2 நாளா.26:5).
உசியா அரசன், தன்னுடைய இளம் வயதில் தனது மக்களை வழிநடத்த தன்னிடத்தில் ஆற்றலில்லையென்பதை அறிந்திருந்து; தேவனை சார்ந்து, அவரைத் தேடி வாழ்ந்த பொழுது அவருடைய காரியங்களை கர்த்தர் வாய்க்கச்செய்தார்.
ஆயினும், உசியா வெற்றியடைந்து பலப்பட்டபோது, அவனுடைய மனதில் மனமேட்டிமை உண்டானது. உசியா ஒன்றுமறியாத இளைஞனாயிருந்தபோது, அவன் தேவன்மீது முற்றிலும் சார்ந்திருந்தான். ஆனால், அவன் பலப்பட்டபோது, தனக்குக் கேடுண்டாகுமட்டும், அவனுடைய மனம்மேட்டிமையாகி, தன் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக மீறுதல் செய்து தூபபீடத்தின் மேல் தூபங்காட்ட கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசித்தான் (2 நாளா.26:16). அந்தப் பெருமை அவனைத் தோல்விக்கு வழிநடத்தியது
நம்முடைய ஆண்டவருடைய மிகப் பெரிய சுபாவங்களில் ஒன்று எப்படிப்பட்ட பாவியாக இருந்தாலும் அவனை சிநேகிக்கிறவர். ஆனால் அதே வேளையில் பெருமைக்காரனுக்கு கர்த்தர் எப்போதும் எதிர்த்து நிற்கிறார். தாழ்மையுள்ளவனுக்கோ கிருபையளிக்கிறார் (யாக்.4:6).
உசியா அரசன் தனது வாழ்வில் கர்த்தரை தேடின பொழுது அவருடைய காரியங்கள் எல்லாம் வாய்த்தது. மனமேட்டிமை வந்தபொழுதோ வாழ்வில் தோல்வி. இந்த புதிய மாதத்தில் நுழையும் அன்பு தேவனுடைய பிள்ளையே, மனத்தாழ்மையோடு தேவனை தேடினால், அவர் உங்களுடைய காரியங்களை வாய்க்கச் செய்து, உங்களுடைய எல்லையை விரிவாக்குவார். நாம் பெற்ற அனைத்தும் தேவனுடையது. பெருமை பாராட்ட நம்மிடத்தில் ஒன்றுமே இல்லை. எல்லாம் தேவ கிருபை என்ற எண்ணத்திற்கு வந்தால் வாழ்வில் உயருவது நிச்சயம்.
“எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான். எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ அவன் பாக்கியவான்.” சங்கீதம் 32:1,2.
ஒரு மனிதன் தன் பாவத்தைக் குறித்த குற்ற உணர்வினால் (குற்ற மனசாட்சியினால்) வாதிக்கப்படுவதே உண்மையில் அவன் அனுபவிக்கக்கூடிய பாடுகளிலெல்லாம் மிகப் பெரிய பாடாகும். குற்ற உணர்விலிருந்து விடுதலையாக்கப்படுவதே உண்மையில் அவன் அனுபவிக்கக்கூடிய விடுதலைகளிலெல்லாம் மிகப் பெரிய விடுதலையாகும். அறிக்கை செய்யப்படாத பாவங்களே குற்ற உணர்வை வருவிக்கின்றன. நீங்கள் ஒரு வேளை திடீர் திகில், மரண பயம், நிராசை, உள்ளான சமாதானமின்மை, அடிக்கடி சடுதியாக வெடித்து வெளிவரும் கோபம், தூக்கம் கலைதல் ஆகியவற்றினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பீர்களாயின், அவற்றுக்கான ஒரு காரணம், அறிக்கை செய்யப்படாமல் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ஏதோ ஒரு பாவமாயிருக்கக் கூடும்.
இந்த சங்கீதம் மார்ட்டின் லூதர் அவர்களுக்கு மிகவும் விருப்பமான ஒரு சங்கீதமாயிருந்தது. இரட்சிக்கப்படுவதற்கு முன்பு மிகவும் பொல்லாத மனுஷனாயிருந்த பரி.அகஷ்டின், தான் இரட்சிக்கப்பட்ட பின்னர் இந்தச் சங்கீதத்தைத் தன்னுடைய படுக்கையறையின் சுவரில் எழுதி வைத்து,அடிக்கடி அதை வாசித்து அழுதாராம். இச்சங்கீதம் பாவ அறிக்கையைக் குறித்த சில முக்கியமான சத்தியங்களை நமக்குப் போதிக்கிறது.
“எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான்.” சங்கீதம் 32:1
மன்னிப்பைப் பெற்ற ஜனங்கள் மெய்யாகவே ஆசிர்வதிக்கப்பட்டவர்களாவர். நாம் நம்முடைய பாவங்களை மூடி வைக்கும் வரை, தேவன் அவைகளை மூடி மறைக்க மாட்டார். ஆனால் நாம் மனஸ்தாபப்பட்டு அவைகளை அறிக்கை செய்யும்போது, தேவன் நம்மை சுத்திகரித்து, என்றென்றைக்குமாக நம்மை மன்னித்துவிடுகிறார்.
“எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ” என்பது, ‘எவனுடைய ஆவி முழுமையாக அறிக்கை செய்திருக்கிறதோ’என்று பொருள்படும் என Moffat மொழிபெயர்ப்பு கூறுகிறது. ‘அறிக்கை’ என்னும் வார்த்தைக்குரிய கிரேக்க பதம் ‘ஹோமோலோஜியோ’ (homologeo) என்பதாகும். ‘அதே காரியத்தைப் பேசு’ என்பதே அதன் பொருளாகும். சிலர் அறை மனதுடன் பாவ அறிக்கை செய்வதுண்டு. அதாவது அவர்கள் பாவத்தை அறிக்கை செய்யும்போது, முழுமையான உண்மையைக் கூறுவதில்லை. வேறு சிலர் தாங்கள் செய்த ஒரு குற்றத்தைத் தாங்களே செய்ததாக முழுமையாக ஒத்துக்கொள்ளாமல் தங்கள் குற்றத்திற்கு வேறொருவரையோ அல்லது வேறொன்றையோ ஒரு பகுதியாவது காரணங்காட்டி (குற்றப்படுத்தி) அறிக்கை செய்கிறார்கள். ஆனால் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு பாவம் வெளியரங்கமாகவும்,மெய் மனஸ்தாபத்துடனும், சரியான விதத்திலும் அறிக்கை செய்யப்பட்ட மாத்திரத்தில், கிறிஸ்தவ ஜீவியம் மிகவும் இலகுவானதாக மாறிவிடுகறது – பாவத்தினாலும் குற்றமனப்பான்மையினாலும் உண்டாகிற பாரம் அகன்றுபோகிறது!
ஜெபம்: எங்களுடைய பாவங்களுக்காக சிலுவையில் மரித்து, எங்களை வாழ வைப்பதற்காக உயிரோடு எழுந்த இயேசுவே, பாவ உலகில் வாழும் என்னை கண்நோக்கி பாரும். நான் செய்த பாவங்களை மன்னித்தருளும். நொறுங்குண்ட இருதயத்தை புறக்கனியா தேவனே, என்னை உமது கரங்களில் வைத்து பாதுகாத்து கொள்ளும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கின்றேன் தந்தையே. ஆமேன்
EDIT BJR “நான் அவர்கள் அநியாயங்களைக் கிருபையாய் மன்னித்து, அவர்கள் பாவங்களையும் அக்கிரமங்களையும் இனி நினையாமலிருப்பேன்” எபிரேயர் 8.12.
தேவனுடைய பிள்ளைகள் பலரும் தங்களைத் தாங்களே குற்றப்படுத்திக்கொண்டவர்களாய், குற்ற மனப்பான்மையுடன் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். அவர்கள் மெய்யான மனஸ்தாபத்துடன் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டபோதுதானே தேவன் அவர்களை மன்னித்திருந்தாலும், அவர்கள் தங்களைத் தாங்களே மன்னித்துக்கொள்ளக் கூடாதவர்களாயிருக்கின்றனர். சிலருடைய விஷயத்தில் சாத்தான், “நீ இவ்வளவு பெரிய பாவம் செய்திருக்க, மகா பரிசுத்தரான தேவன் உன்னை மன்னித்து விட்டார் என்று நினைப்பதற்கு உனக்கு எவ்வளவு தைரியம்!” என்று அவர்களிடத்தில் இரகசியமாகப் பேசி, அவர்களை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்க முற்படுகிறான்.
அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாய் இருக்கிறான். “கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.” ரோமர் 8.1 என்றே வேதவசனம் கூறுகிறது.
*ஒருமுறை ஒரு கிறிஸ்தவ வாலிபன் ஒரு பாவம் செய்தான். அவன் தன் உள்ளத்தில் அதைக் குறித்து உணர்த்தப்பட்டு, மனஸ்தாபத்துடன் அப்பாவத்தை அறிக்கை செய்ததுமல்லாமல், அப்போதே தன் வாழ்க்கையையும் அந்த விஷயத்தில் சரிப்படுத்திக் கொண்டான். ஆனால் பிசாசானவனோ அவனைக் குற்றப்படுத்திக் கொண்டேயிருந்தான். இவ்வாறு பல ஆண்டுகள் குற்ற உணர்வோடு (guilty feeling)போராடிய பின்னர், அவன் ஒரு நாள் தன் சபையில் கிறிஸ்துவை அடிக்கடி தரிசனத்தில் காணும் ஒரு மூத்த சகோதரியை அணுகினான். அவர்களிடம் அவன், ‘சகோதரி! அடுத்த முறை நீங்கள் தரிசனத்தில் கர்த்தராகிய இயேசுவைக் காணும்போது, நான் வாலிபனாக இருந்தபோது என்ன பாவம் செய்தேனென்று தயவுசெய்து அவரிடம் கேளுங்கள்‘ என்று கூறினான். அவர்களும் அப்படிச் செய்ய இசைந்தார்கள். அடுத்தமுறை கிறிஸ்து அவர்களுக்குத் தரிசனமானபோது அவர்கள், ‘கர்த்தாவே, அந்த நபர் வாலிபனாக இருந்தபோது செய்த பாவம் என்ன?’ என்று கேட்டார்கள். அதற்கு, ‘அது எனக்கு ஞாபகமில்லை!‘ என்று அவரிடத்திலிருந்து சட்டென பதில் வந்தது.
‘எல்லாவற்றையும் அறிந்திருக்கிற தேவன் – நம் தலையிலுள்ள ஒவ்வொரு முடியையும் எண்ணிவைத்திருக்கிறவர் – நம் பாவங்களை எப்படி மறந்துவிட முடியும்?’ என்று நாம் நினைக்கலாம். ஆனால் வேதவசனம் அப்படித்தான் கூறுகிறது: “நான் அவர்கள் அநியாயங்களைக் கிருபையாய் மன்னித்து, அவர்கள் பாவங்களையும் அக்கிரமங்களையும் இனி நினையாமலிருப்பேன்” எபிரேயர் 8.12.நாம் நம்முடைய பாவங்களுக்காக மெய்யாகவே மனஸ்தாபப்பட்டால், தேவன் நம் பாவங்களை மன்னித்துவிடுவது மாத்திரமல்ல, அவற்றை அறவே மறந்து விடுகிறார்! இது வியக்கதக்க ஒரு உண்மையாகும்! நாம் பரலோகத்தின் வாசலைச் சென்றடையும் போது கர்த்தர் அங்கே நின்றுகொண்டு, ‘நீ செய்தவை யாவும் என் நினைவில் உள்ளன; என்றாலும், நீ மன்னிப்பு கேட்டுவிட்டபடியால் உள்ளே வர உன்னை அனுமதிக்கிறேன்‘ என்று கூறுவார் என எண்ணுகிறோம். அது ஒருக்காலும் இல்லை! இப்போது மாத்திரமல்ல, நித்தியம் முழுவதிலும் – ஒருபோதும் பாவமே செய்யாதவர்கள் போலதான் நாம் அவர் முன் இருப்போம்! கர்த்தராகிய இயேசுவின் இரத்தம் நம்மை மன்னிப்பது மாத்திரமல்ல,நம்மை நீதிமான்களுமாக்குகிறது. ஆகவே நம் தேவன் நம் பாவங்களை மன்னித்து, அவை எல்லாவற்றையும் மறந்துவிட்டபடியினால், நாமும் நம்மை நாமே மன்னித்துக் கொள்வோமாக!!
EDIT BJR அவன் மனைவியோ பின்னிட்டுப் பார்த்து, உப்புத்தூண் ஆனாள். (ஆதி 19.26)
இந்த பின்னிட்டு பார்க்கிற காரியத்தின் முக்கியம் லோத்தின் மனைவியை நினைக்கும் போது நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். கர்த்தருடைய தூதன் பின்னிட்டுப் பாராதே என்று சொன்னதில் அநேக காரியங்கள் அடங்கியிருக்கிறது. இந்த உலகத்தில் நாம் வாழும் போது கவலையற்றவர்களாயிருக்க வேண்டும். கவலை ஒருமனிதனின் வாழ்விலிருந்தால் அது அவனை சிறிது சிறிதாகக் கொன்று விடும். “கவலைப்படுகிறதினால் உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்.மிகவும் அற்பமான காரியமுதலாய் உங்களால் செய்யக்கூடாதிருக்க, மற்றவைகளுக்காக நீங்கள் கவலைப்படுகிறதென்ன?” (லூக்கா 12:25).“மனுஷனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்; நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும்”(நீதி 12:25). நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள் (பிலி 4:6).
அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்(I பேதுரு 5:7). அடுத்தபடியாக பற்றற்றவர்களாக வாழ வேண்டும். அது சந்நியாச வாழ்வு அல்ல. அதைக்காட்டிலும் மேன்மையானது. “இவ்வுலகத்தை அனுபவிக்கிறவர்கள் அதைத் தகாதவிதமாய் அனுபவியாதவர்கள்போலவும் இருக்கவேண்டும்; இவ்வுலகத்தின் வேஷம் கடந்துபோகிறதே (I கொரி 7:31).எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் பக்திவிருத்தியை உண்டாக்காது(I கொரி 10:23). இவ்வுலகத்திலே ஐசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும், நிலையற்ற ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வையாமலும், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைக்கவும், அறிந்திருக்க வேண்டும் (Iதீமோ6:17). இந்த உலகத்தில் நாம் எவைகளை அனுபவிக்க வேண்டும் என்று கர்த்தர் திட்டம்பண்ணி நமக்கு கொடுத்திருக்கிறார். அவைகளை மட்டுமே நாம் அனுபவிக்க வேண்டும். கிறிஸ்தவ வாழ்வு என்கிறது ஏனோ தானோ என்று வாழ்கிற வாழ்வு அல்ல.
கிறிஸ்துவை பின்பற்றி வாழ்கிற ஒரு வெற்றி வாழ்வு. அனுபவத்தில் கிறிஸ்து நம் வாழ்வில் இல்லாவிட்டால் நம்முடைய வாழ்வு வீணான வாழ்வாகும். ரோமர் 8:8 மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள். “மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்” (ரோமர் 8:13). தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான் (கலா 6:8). ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள் (I யோவான் 2:16).
இந்தக் கூடாரத்திலிருக்கிற நாம் பாரஞ்சுமந்து தவிக்கிறோம் (II கொரி 5:4). அதனால்தான் இயேசு சொன்னார் வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் (மத் 11:28). லோத்தின் மனைவிக்கு அதிமான உலக பாரமிருந்தது. அந்த இடத்தை விட்டுபோக மனமில்லாமலிருந்தது. எவைகளை எடுத்துக் கொண்டு போக முடியும் என்கிற எண்ணமிருந்தது. இவைகளை விட்டு பிரிந்து போகிறேனே என்ற ஏக்கமிருந்தது. தேவ தூதர்கள் சொன்னது போல சம்பவிக்குமோ அல்லது சம்பவிக்காதோ என்கிற அவிசுவாசமிருந்தது, தேவ வார்த்தையின் முக்கியத்தும் அலட்சியம் செய்யப்பட்டது அவளுடைய வாழ்விலிருந்தது. அவபக்தி அவளுடைய வாழ்விலிருந்தது. கீழ்ப்படியாமைஇருந்தது. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
விடியற்காலத்தில் ஆபிரகாம் எழுந்து, தான் கர்த்தருக்கு முன்பாக நின்ற இடத்திற்குப் போய், சோதோம் கொமோரா பட்டணங்களின் திசையையும், சமபூமியாகிய தேசம் முழுவதையும் நோக்கிப் பார்த்தான்; அந்தப் பூமியின் புகை சூளையின் புகையைப்போல எழும்பிற்று.. தேவன் அந்தச் சமபூமியின் பட்டணங்களை அழிக்கும்போது, தேவன் ஆபிரகாமை நினைத்து, லோத்து குடியிருந்த பட்டணங்களைத் தாம் கவிழ்த்துப்போடுகையில், லோத்தை அந்த அழிவின் நடுவிலிருந்து தப்பிப்போகும்படி அனுப்பி விட்டார் (ஆதி 19.17, 28, 29). இந்த சோதோமின் அழிவு நமக்கு மிகப் பெரிய எச்சரிப்பை கொண்டு வருகிறது. இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் காலத்தில் லோத்தின் நாட்களில் நடந்தது போல நடக்கும். இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான். இரண்டு ஸ்திரீகளில் ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், மற்றவள் கைவிடப்படுவாள் (லூக்கா 17.28-36). நாம் வாழ்கிற நாட்களில் உலக இன்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பரலோக இன்பத்தின் மீது பற்றுகொண்டு இயேசுவின் மீதும் அவருடைய வருகையின் மீதும் நம்பிக்கை கொண்டு வாழ்வோமானால் நாமே பாக்கியவான்கள். அவர் வருகையில் நாம் வெட்கப்பட்டு போக மாட்டோம்.
மார்த்தாண்டம் நேசமணி கல்லூரி மாணவர் கடலில் விழுந்து இறந்ததால் கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அனைவரும் வீட்டுக்கு சென்று கொண்டு இருக்கின்றனர்.
நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார். I பேதுரு 5:5.
பெருமைக்கார மீனவர் ஒருவர் குளம் ஒன்றில் மீன் பிடித்துவிட்டு, அதைத் தனது தோளில் சுமந்து கொண்டு, வீட்டிற்க்கு திரும்பிக்கொண்டிருந்தார். குளத்திற்கும் வீட்டிற்கும் நடுவில் இருந்த காட்டில் குள்ளநரி ஒன்று வாழ்ந்து வந்தது. பசியோடு சுற்றிக்கொண்டிருந்த குள்ளநரிக்கு மீனவனின் தோளில் தொங்கிக்கொண்டிருந்த மீன்களை எப்படியாவது சாப்பிட வேண்டும் என்ற ஆசை ஏற்ப்பட்டது. அதற்காக ஒரு திட்டமும் தீட்டியது. குள்ளநரி குறுக்கு வழியில் சென்று, மீனவன் வரும் வழியில் படுத்துக்கொண்டு இறந்தது போல நடித்தது. நரி இறந்துவிட்டதாக கருதி அதைத் தூக்கி தோளின் மறுபக்கம் போட்டுக் கொண்டான் மீனவன். நரியின் தோல் சந்தையில் நல்ல விலை போகும். அத்துடன் வரும் வழியில் நரியை வேட்டையாடியதாக ஊர் மக்களிடம் பெருமை காண்பிக்கலாம் என்று சிந்தித்துக்கொண்டே நடந்து சென்றான். மீனவனின் பின்னந்தோளில் தொங்கிக்கொண்டே மீன்களை சாப்பிட்டு முடித்தது குள்ளநரி. மீனவன் ஊருக்குள் செல்வதை அறிந்த குள்ளநரி அவனது தோளிலிருந்து குதித்து காட்டுக்குள் ஓடி மறைந்தது. ஊர் மக்கள் அனைவரது மத்தியிலும் வெட்கி நாணினான் அந்த பெருமைக்கார மீனவன்.
இயேசுவுக்கு பிரியமானவர்களே, வேத வசனத்தின்படி வாழ வாஞ்சிக்கும் நாம் பெருமைக்கு விலகி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சில நேரங்களில் மற்றவர்கள் நம்மை மேன்மையாக நினைக்க வேண்டுமென்று நமது எண்ணமும் பேச்சும், செயலும் காணப்படும். உதாரணத்திற்கு திருமண நேரத்தில் வந்த கூட்டத்தை எண்ணி பெருமைப்படுவார்கள். தங்களின் படிப்பையோ அல்லது பிள்ளைகளின் பிள்ளைகளின் படிப்பையோ அல்லது அவர்கள் வேலை பார்க்கும் காரியத்தையோ பிறரிடம் கூறி பெருமை கொள்வார்கள். இப்படியாக பெருமை எனும் வலையில் விழாத மனிதர்கள் யாரும் இருக்க முடியாது.
இந்த நாளில் சிறிது நேரமெடுத்து, உங்களுடைய இருதயத்தை ஆராய்ந்து, மறைந்துகிடக்கிற பெருமையின் விதையை வெளியே கொண்டுவரும்படி தேவனிடம் வேண்டுங்கள். பிலிப்பியர் 2:3-ல், ஒன்றையும் வாதினாலாவது, வீண் பெருமையினாலாவது செய்ய வேண்டாம் என்று அப்போஸ்தலராகிய பவுல் கூறுகிறார். இந்த உலகத்தின் உள்ள தீமைகளுக்கு மைய்யப்புள்ளியாக பெருமை உள்ளது.
பெருமையினால் லூசிபர் வானத்திலிருந்துத் தள்ளப்பட்டான். நாம் பெருமைக்கு இடங்கொடுக்காமல் பரிசுத்தமாக வாழவேண்டுமென்பதே தேவனுடைய விருப்பமாக இருகின்றது. மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுங்கள். தேவ கிருபையை பெற்றுக்கொள்ளுங்கள். கர்த்தர் தாமே உங்களை ஆசிர்வதிப்பாராக.
கன்னியாகுமரி மாவட்டம் 31.07.2019, செயின் பறிப்பு தொடர்பாக விழிப்புணர்வு அடங்கிய விளம்பர பலகைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.N.ஸ்ரீநாத் IPS அவர்கள் உத்தரவின் பேரில் மாவட்டத்தின் முக்கிய இடங்களான மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் மற்றும் வடசேரி பேருந்து நிலையங்களில் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சமூக ஊடகப்பிரிவு சார்பாக வைக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
வேட்டையாட திரியும் காமக் காட்டு வெறி பிடித்த பூனைகளை விரட்டுவதைவிட மீனை மூடிவைப்பதே சிறந்தது…ஒரு தாய்க்கு மகனாக !!! ஒரு பெண்ணுக்கு நண்பனாக !!! பெண் இனத்துக்கே சகோதரனாக இதை பதிவு செய்கிறேன் ……………………..
கி.பி. 1741ம் ஆண்டு குமரி மாவட்டம் குளச்சல் கடற்கரை வந்திறங்கிய டச்சுப்படையினர் தேங்காப்பட்டணம், இரணியலை கைப்பற்றி விட்டு கல்குளம், கோட்டாரை பிடிக்க முயற்சி செய்தனர். இதனை அறிந்த திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மா, கொல்லம் முற்றுகையை நிறுத்திவிட்டு கல்குளம் (இன்றைய தக்கலை – பத்மநாபபுரம் அரண்மனை) திரும்பினார். பின்னர் படை தளபதி தளவாய் ராமைய்யனுடன் குளச்சல் வந்து டச்சுப்படையை எதிர்த்தார்.
மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் படையில் பீரங்கி படை குறைவு. எனவே அவர் ஒரு தந்திரம் செய்தார். பனை மரங்களை முறித்து அவற்றை மாட்டு வண்டியில் பீரங்கி போல் நீட்டி வைத்து, தன்னிடம் ஏராளமான பீரங்கிகள் இருப்பதுபோல் பாவனை காட்டினார். இதனால் டச்சுப்படையினர் திருவிதாங்கூர் படையிடம் ‘நம்மைவிடவும் ராட்சத பீரங்கிகள் உள்ளது’ என நம்பி திருவிதாங்கூர் படையிடம் சரணடைந்தனர் என செவிவழி செய்திகள் கூறுகிறது. தவிர திருவிதாங்கூர் படை மீனவர்களின் உதவியுடன் டச்சுப்படையை வென்றதாகவும் கூறப்படுகிறது.
குளச்சல் கடற்கரையில் சுமார் 2 மாதம் நீடித்த இப்போர் 1741ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி முடிவுக்கு வந்து, திருவிதாங்கூர் படை வெற்றிப்பெற்றது. இந்த வெற்றியை குறிக்கும் வகையில் மன்னர் மார்த்தாண்ட வர்மா குளச்சல் கடற்கரையில் போர் வெற்றித்தூண் ஒன்றையும் நிறுவினார்.
இந்த தூண் மீது காணப்படும் சங்கு முத்திரையே இப்போதும் குளச்சல் நகராட்சி முத்திரையாக உள்ளது. இந்த போர் வெற்றித்தூணில் ஆண்டுதோறும் ஜூலை 31ம் தேதியன்று மெட்ராஸ் ரெஜிமெண்ட் (திருவனந்தபுரம் – பாங்கோடு) பட்டாலியன் வீரர்கள் வீரவணக்கம் நாள் கடைப்பிடித்து வருகின்றனர். போரில் வெற்றி பெற்ற 278வது ஆண்டு தின வீரவணக்கம் இன்று கடைபிடிக்கப்பட்டது இதற்காக மெட்ராஸ் ரெஜிமெண்ட் 19வது பட்டாலியன் வீரர்கள் குளச்சல் வீரவணக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் திருவிதாங்கூர் மன்னர் பிரதிநிதி, கர்னல் மொஹ்வீர் சிங் ஹெரிவால், குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம். வடநேரே, எஸ்.பி. ஸ்ரீநாத் மற்றும் ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்
குளச்சலில் மார்த்தாண்டவர்மா மனனரின் படை தளபதி அனந்தபத்மநாப நாடார் தலமையில் களரி வீர்களுடன் மீனவர்கள் மற்றும் தேங்கை இஸ்லாமியர்கள் உதவியுடன் டச்சு படையை வென்ற நாள் இன்று
குளச்சல் கடற்கரையில் அமைந்துள்ள போர் வெற்றி தூணில் மெட்ராஸ் ரெஜிமெண்ட் 19வது பட்டாலியன் சார்பில் இன்று வீரவணக்கம் செலுத்தப்படுகிறது . கி.பி. 1741ம் ஆண்டு குமரி மாவட்டம் குளச்சல் கடற்கரை வந்திறங்கிய டச்சுப்படையினர் தேங்காப்பட்டணம், இரணியலை கைப்பற்றி விட்டு கல்குளம், கோட்டாரை பிடிக்க முயற்சி செய்தனர். இதனை அறிந்த திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மா, கொல்லம் முற்றுகையை நிறுத்திவிட்டு கல்குளம் (இன்றைய தக்கலை – பத்மநாபபுரம் அரண்மனை) திரும்பினார். பின்னர் படை தளபதி தளவாய் ராமைய்யனுடன் குளச்சல் வந்து டச்சுப்படையை எதிர்த்தார்.
மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் படையில் பீரங்கி படை குறைவு. எனவே அவர் ஒரு தந்திரம் செய்தார். பனை மரங்களை முறித்து அவற்றை மாட்டு வண்டியில் பீரங்கி போல் நீட்டி வைத்து, தன்னிடம் ஏராளமான பீரங்கிகள் இருப்பதுபோல் பாவனை காட்டினார். இதனால் டச்சுப்படையினர் திருவிதாங்கூர் படையிடம் ‘நம்மைவிடவும் ராட்சத பீரங்கிகள் உள்ளது’ என நம்பி திருவிதாங்கூர் படையிடம் சரணடைந்தனர் என செவிவழி செய்திகள் கூறுகிறது. தவிர திருவிதாங்கூர் படை மீனவர்களின் உதவியுடன் டச்சுப்படையை வென்றதாகவும் கூறப்படுகிறது. குளச்சல் கடற்கரையில் சுமார் 2 மாதம் நீடித்த இப்போர் 1741ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி முடிவுக்கு வந்து, திருவிதாங்கூர் படை வெற்றிப்பெற்றது. இந்த வெற்றியை குறிக்கும் வகையில் மன்னர் மார்த்தாண்ட வர்மா குளச்சல் கடற்கரையில் போர் வெற்றித்தூண் ஒன்றையும் நிறுவினார். இந்த தூண் மீது காணப்படும் சங்கு முத்திரையே இப்போதும் குளச்சல் நகராட்சி முத்திரையாக உள்ளது. இந்த போர் வெற்றித்தூணில் ஆண்டுதோறும் ஜூலை 31ம் தேதியன்று மெட்ராஸ் ரெஜிமெண்ட் (திருவனந்தபுரம் – பாங்கோடு) பட்டாலியன் வீரர்கள் வீரவணக்கம் நாள் கடைப்பிடித்து வருகின்றனர். இன்று போரில் வெற்றி பெற்ற 278வது ஆண்டு தின வீரவணக்கம் நாள் கடைபிடிக்கப்படுகிறது. இதற்காக மெட்ராஸ் ரெஜிமெண்ட் 19வது பட்டாலியன் வீரர்கள் குளச்சல் வந்தனர். அவர்கள் வெற்றித்தூண் வளாகத்தை சுத்தம் செய்து வீரவணக்க நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். . வீரவணக்க நிகழ்ச்சியில், திருவிதாங்கூர் மன்னர் பிரதிநிதி, கர்னல் மொஹ்வீர் சிங் ஹெரிவால், குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம். வடநேரே, எஸ்.பி. ஸ்ரீநாத் மற்றும் ராணுவ அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
மாடு தன் எஜமானையும், கழுதை தன் ஆண்டவனின் முன்னணையையும் அறியும்; இஸ்ரவேலோ அறிவில்லாமலும், என் ஜனம் உணர்வில்லாமலும் இருக்கிறது என்கிறார். ஏசாயா 1:3.
2013-ம் ஆண்டு நியுயார்க்கில் நடந்த உண்மைச் சம்பவம் இது. சிசில் வில்லியமஸ் (Cecil Williams) என்ற 61 வயது கண்பார்வையற்றவர் ஒரு நாயை வளர்த்து வந்தார். ஒருநாள் சிசில் பல் மருத்துவரை பார்ப்பதற்காக நாயுடன் சென்றார். ரயில் நிலையத்தில் ஒரு பயணியர் மேடையில் நின்றுகொண்டிருந்தபோது சிசிலுக்கு மயக்கம் ஏற்பட்டது. தன் எஜமானனின் உயிருக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை புரிந்துகொண்ட நாயானது, சிசிலை நடைமேடையிலிருந்து தண்டவாளத்தில் விழுந்துவிடாமல் இருக்க கடுமையாக முயற்சித்தது. வேகமாக ஒலியெழுப்பி குறைத்து சிசிலுக்கு தொடர்ந்து முத்தமிட்டு அவரை எழுப்ப முயற்சித்தது. ஆனாலும் சிசில் மயங்கி தண்டவாளத்தில் விழுந்துவிட்டார். உடனடியாக அந்த நாயும் தண்டவாளத்தில் குதித்து தன் எஜமானனை காப்பாற்றும் பணியைத் தொடர்ந்தது. அப்பொழுது அந்த தண்டவாளத்தில் வந்துகொண்டிருந்த ரயிலின் ஓட்டுனர், அந்த நாயின் அபாயக் குரலை கேட்டு ரயிலின் வேகத்தைக் குறைத்தார். இதனால் சிசிலும், அந்த நாயும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்கள்.
பிரியமானவர்களே, ஒரு நாய்க்கு தன்னை வளர்த்த எஜமானின் மேல் எத்தனை பாசம் உண்டு பாருங்கள், ஆனால் நமக்கு ஜீவனை கொடுத்து, நமக்காக தம் சொந்த குமாரனை ஜீவ பலியாக கொடுத்து நம்மை இரட்சித்த தேவனை நாம் எந்த அளவு பாசம் வைத்திருக்கிறோம்? நேசம் வைத்திருக்கிறோம்? கிறிஸ்தவர்கள் என்று சொல்லி கொள்ளும் அநேகரிடத்தில் கர்த்தரை குறித்த பயம் இல்லை, பக்தி இல்லை, அவர் மேல் ஒரு நேசமோ, பாசமோ இல்லை. வாராவாரம் ஆலயத்திற்கு போய் வந்தால் அதுவே அவருக்கு செய்கிற பெரிய காரியம் என்று நினைத்து கொண்டிருக்கிறோம்!
“என் ஜனங்களோ மதியற்றவர்கள், என்னை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்; அவர்கள் பைத்தியமுள்ள பிள்ளைகள்,அவர்களுக்கு உணர்வே இல்லை; பொல்லாப்புச்செய்ய அவர்கள் அறிவாளிகள், நன்மைசெய்யவோ அவர்கள் அறிவில்லாதவர்கள்” (எரேமியா 4:22)
என்று தேவன் தம் மனக்குமுறலை தெரிவிக்கின்றார். நம்மை உண்டாக்கிய தேவனை நாம் அறியாதிருந்தால், அது எத்தனை பரிதாபம்!. சிறு பிள்ளைகள் கூட செருப்பு அணியாமல் பல நூறு கிலோ மீட்டர்கள்,ஹரோஹரா சொல்லிக்கொண்டு நடக்கின்றார்கள் அவர்களுக்கு இருக்கிற வைராக்கியம் நமக்குள் இருக்கிறதா என்று பார்த்தால் மிகவும் குறைவுதான்!
கர்த்தரை குறித்த அறிவும், உணர்வும் நமக்குள் வர வேண்டும். இன்றைய நாட்களில் அநேக கிறிஸ்தவ வீடுகளில் காலையில் எழுந்தவுடன் வேதத்தை வாசிப்பதில்லை, ஜெபிப்பதில்லை! இதிலே கணவர் மனைவியையும், மனைவி கணவரையும் உற்ச்சாக்கப்படுத்த வேண்டும். பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு வேதத்தை தியானிக்க சொல்லி கற்று கொடுக்க வேண்டும். கர்த்தரை குறித்த வைராக்கியம் அவர்களுக்கு எப்பொழுதும் இருக்கும்படியாக செய்ய வேண்டும். மற்றவர்கள் இந்த பிள்ளைகளை காணும்போது, கிறிஸ்து இவர்களுக்குள் இருப்பதை காணட்டும். தேவனை அறிகின்ற அறிவில்,குடும்பமாக, திருச்சபையாக வளர்ந்து, உணர்வுடையவர்களாய் வாழ்ந்து தேவனை மகிமைப்படுத்துவோம். ஆமென் அல்லேலூயா!
கர்த்தருடைய பிள்ளைகளாகிய நமக்கு கர்த்தர் முக்கியமான ஒரு காரியத்தைச் சொல்லுகிறார். நம்முடைய சுகத்திற்க்காகவோ, ஆசீவாதத்திற்க்காகவோ, பிள்ளைகளின் தேவைகளுக்காகவோ ஏதோ ஒரு ஆசீர்வாதத்திற்க்காக அதிக விசுவாசத்தோடு கருத்தாக வாக்குத்தத்தங்களைச் சொல்லி, அநேக நாட்களாக நாம் ஜெபித்துக் கொண்டிருந்தபோதும் இன்னும் நமக்கு அற்புதம் நடக்கவில்லை என்று நாம் நினைக்கலாம். ஆனால், நம்முடைய கர்த்தராகிய இயேசு நாம் ஏதோ ஒரு காரியத்தில் அற்புதத்தை எதிர்பார்த்து ஜெபிக்கும்போது “ஒருவன்பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள்” என்று சொல்கிறார். (மாற்கு 11:25, 26)
நாம் மன்னிக்கிற இருதயம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். நாம் மன்னித்தால் நமக்கு அற்புதம் நடக்கும். நாம் மன்னித்தால் நம்முடைய ஜெபத்திற்க்கு பதில் வரும். மன்னிக்காவிட்டால் நம்முடைய ஜெபம் கேட்க்கப்படமாட்டது. யார்பேரிலாவது நமக்கு குறை இருக்கலாம் அந்த நபர் நம்முடைய நண்பர்களாக இருக்கலாம் அல்லது நம்முடைய சகோதர சகோதரிகளாக இருக்கலாம் அல்லது நம்மோடு வேலை பார்க்கிறவர்களாக இருக்கலாம். நாம் பிறருடைய குறையை மன்னிக்காவிட்டால் நம்முடைய ஜெபம் கேட்க்கப்படமாட்டது.
மன்னிப்பு கேட்காதவர்களையும் மன்னிக்க வேண்டும் பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். லூக்கா 23:34 இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள்! அவரை பரிகாசம் பண்ணினார்கள்! முகத்தில் துப்பினார்கள்! மேலும் பொய்யான குற்றச்சாட்டுகளை சொன்ன மதத்தலைவர்கள் எல்லோரும் சிலுவையைச் சுற்றிலும் நின்று கொண்டிருந்தார்கள். ஆனால் இயேசு, இரத்தம் வடிய வடிய, தாங்கமுடியாத வேதனையோடு சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தபோதும், தன்னை சிலுவையில் அறைந்தவர்கள், அறைவதர்க்கு கரணமாயிருந்தவர்கள், பரிகாசம் பண்ணினவர்கள் எல்லோருக்காகவும் பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள் என்று மன்றாடினார்.
சிலர், முதலில் அவர்கள் என்னிடம் வந்து மன்னிப்புக் கேட்கட்டும் நான் அவர்களை மன்னிக்கிறேன் என்று சொல்லுவார்கள். பாருங்கள் இயேசு வேதனையோடு சிலுவையில் தொங்கும்போது ,யார் அவரிடத்தில் வந்து மன்னிப்பு கேட்டார்காள்? யருமே இயேசுவினிடத்தில் வந்து மன்னிப்பு கேட்கவில்லை. அப்படியிருந்தும், தன்னிடம் மன்னிப்பு கேட்க்காதவர்களையும் கூட மன்னித்தார். இதுதான் இயேசு நமக்கு காண்பித்த மாதிரி. அதனால் கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாமும் மன்னிப்பு கேட்க்காதவர்களையும் மன்னிக்கவேண்டும். கர்த்தர் பெரிய கரியங்களைச் செய்வார். —————————————— குழந்தை பாக்கியத்திற்க்கான அன்னாளின் ஜெபம்: இன்றைக்கு அறிக்கை செய்ய வேண்டிய வசனங்கள்:
கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார்; கர்த்தர் என் ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுவார். என் பகைஞர் எல்லாரும் வெட்கி மிகவும் கலங்கிப்போவார்கள்; அவர்கள் பின்னாகத் திரும்பிச் சடிதியிலே வெட்கப்படுவார்கள். சங்கீதம் 6:9-10.
அவர்களுக்கு நன்மையுண்டாக நான் என் கண்களை அவர்கள்மேல் வைத்து, அவர்களை இந்த தேசத்துக்குத் திரும்பிவரப்பண்ணி, அவர்களைக் கட்டுவேன், அவர்களை இடிக்கமாட்டேன், அவர்களை நாட்டுவேன், அவர்களைப் பிடுங்கமாட்டேன். எரேமியா 24:6.
என் கைகளை உமக்கு நேராக விரிக்கிறேன்; வறண்ட நிலத்தைப்போல் என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது. கர்த்தாவே, சீக்கிரமாய் எனக்குச் செவிகொடும், என் ஆவி தொய்ந்துபோகிறது; நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாகாதபடிக்கு, உமது முகத்தை எனக்கு மறையாதேயும். சங்கீதம் 143:6,7.