NEWS

Jebasingh National Christian Council

திருநெல்வேலி மாவட்டத்தில் முகக் கவசம் அணிவதை தீவிரமாக கண்காணிக்க நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் மாநில ஒருங்கிணைப்பாளர் NCC ஜெபசிங் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு மனு .

கரோனா நோய் தொற்று திருநெல்வேலி மாவட்டத்தில் மிக அதிகமாக பரவி வருகிறது.

இச்சூழலில் கரோனா நோய் தொற்று பரவுவதை தடுக்க திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் பல்வேறு நல்ல நடவடிக்கைகளை செய்து வருவது பாராட்டுக்குரியது ஆகும்

மேலும் திருநெல்வேலி மாவட்டத்தில் குறிப்பாக , திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் பல இடங்களில் பெரும்பான்மையான மக்கள் முறையாக முகக் கவசம் அணியாமல் நகரில் பல இடங்களில் வலம் வந்த வண்ணம் உள்ளனர் . முகக் கவசம் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் அதை பின்பற்றாமல் இருப்பது கரோனா தொற்றை அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது
.

மேலும் மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் பலர் முகக் கவசம் அணிந்தும் முகங்களில் அணியாமல் வாய்ப் பகுதிக்கு கீழே அணிந்து கொண்டு பணி செய்வதை மாநகரத்தில் பல இடங்களில் காண முடிகிறது . உரிய பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் பெரும்பாலான ஊழியர்கள் பணி செய்து வருவது கவலைக்குரியதாகும் .

ஆகவே தாங்கள் காவல் துறைக்கும் மாநாகராட்சி ஆணையாளருக்கு தகுந்த அரசின் அறிவுரையும் உத்தரவையும் வழங்கி அனைவரும் முகக் கவசம் அணிந்து வெளியே வர தாங்கள் ஆவண செய்ய நேவுனல் கிறிஸ்டியன் கவுன்சில் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் .

Jeba Singh. National Christian Council

Leave a comment