NEWS

NCC Request

மும்பையில் தாதர் பகுதியில் அண்ணல் அம்பேத்கர் வசித்து வந்த ராஜ்க்ருஹா இல்லத்தின் மீது தாக்குதல் நடத்திய சமூக விரோதிகளை கைது செய்து தாக்குதலுக்கான காரணங்களை முழுமையாக விசாரிக்கபட வேண்டும் என நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் மாநில ஒருங்கிணைப்பாளர் NCC ஜெபசிங் அறிக்கை.

டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் அவர்களின் இல்லம் ராஜ்க்ருஹா அண்ணல் அம்பேத்கர் பயன்படுத்திய பொருட்கள், நூல்கள் ஆகியவை வைக்கப்பட்டு அருங்காட்சியமாக அமைக்கபட்டுள்ளது

அதன் இன்னொரு தளத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் .

.( 7.7-20) அன்று சமூக விரோதிகள் இருவர் அங்குள்ள சிசிடிவி கேமராக்களை உடைத்து, இல்லத்தின் கண்ணாடி, ஜன்னல்கள் மீது கற்களை வீசி முழுவதையும் சேதப்படுத்தி உள்ளனர்

. வீட்டின் வெளியே உள்ள பூஞ் செடிகள் உட்பட அனைத்தையும் ஒரு சில நிமிடங்களில் சேதப்படுத்தி அங்கிருந்து தப்பித்து உள்ளனர் .

இந்தியாவின் முக்கியமான தலைவரின் இல்லத்தின் மீது சமூக விரோதிகள் நடத்திய தாக்குதலுக்கான காரணங்களை மகாராஷ்டிரா மாநில அரசு முழுமையாக விசாரித்து உண்மையை கண்டறிந்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் தமிழ்நாடு கமிட்டி சார்பாக அறிக்கையில் தெரிவித்துள்ளார் .

Leave a comment