நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டம் , அடியமங்கலம் கிராமத்தில் கத்தோலிக்க திருச்சபையை சேர்ந்த புனித சவேரியார் பேராலயத்துக்கு 27.10.2000 அன்று கிராம பகுதியில் ஏழை எளிய மாணவ மாணவியருக்கு கல்வி கொடுக்கும் நோக்கத்தோடு மேற்கண்ட நிலம் வாங்கப்பட்டது .
தற்சமயம் கரோனா ஊரடங்கை பயன்படுத்தி அந்த பகுதியில் உள்ள இந்து அமைப்பினர்கள் மேற்கண்ட இடத்தை ஆக்கிரமிப்பு செய்து விநாயகர் சிலையை வைத்து வழிபாடு நடத்தி அமைதியாக உள்ள கிராமத்தில் இரு பிரிவினருக்கு இடையே மத கலவரத்தை தூண்ட கூடிய விதத்தில் செயல்பட்டு வருகின்றனர்
அமைதி பூங்காவான தமிழகத்தில் இது போன்ற மதகலவரத்தை உருவாக்கும் விதத்தில் செயல்படும் சமூக விரோத கும்பல்களை தமிழக காவல் துறை உடனடியாக கைது செய்து சிறுபான்மையினருக்கு பாதுகாப்பான நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம்
NCC Jeba Singh
Director. oppression Relief
State Coordinator
National Christian Council.Tamilnadu
BJR
Director. oppression Relief
malaysia .
Fr. M Jesu Raj. Tamilnadu. Director_oppression Relief.