NEWS

NCC JEBA SINGH

அனுப்புநர் . 2..7.20

NCC ஜெபசிங்
மாநில ஒருங்கிணைப்பாளர்
நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் தமிழ்நாடு
Cell .814406 9997

பெறுநர் .

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் .
தமிழ்நாடு

பொருள் . ஞாயிற்றுகிழமைகளில் கிறிஸ்தவ ஆலயங்களை திறக்க கோரி . மனு .

மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு

தமிழகத்தில் 1 ந் தேதி முதல் கிராம புறங்களில் மத வழிப் பாட்டு தளங்களை திறக்க தாங்கள் அனுமதி வழங்கியதற்கு கிறிஸ்தவ மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்

கிறிஸ்தவ மக்கள் ஞாயிறு வழிபாட்டிற்கு முக்கியம் கொடுத்து ஆலயத்திற்கு சென்று வருவர் .

ஆனால் தற்சமயம் கரோனா நோய் தடுப்பு பணிகளில் 4 வார ஞாயிறு கிழமைகளில் முழு ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது .

இந் சூழ்நிலையில் கிறிஸ்தவ மக்கள் அதிகம் ஆலயத்திற்கு செல்லும் ஞாயிற்றுகிழமைகளில் ஆலயத்திற்கு செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது.

சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக விளக்கும் தங்கள் அரசு ஞாயிறு கிழமை மட்டும் கிறிஸ்தவ மக்கள் காலை மற்றும் மாலை இரு வேளை ஆலயத்திற்கு சென்று ஆராதனைகளில் கலந்து கொள்ள தாங்கள் உடனடியாக ஆவண செய்ய நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் தமிழ் நாடு சார்பாக கேட்டுக்கொள்கிறோம் .

நன்றி .

இப்படிக்கு.

NCC ஜெபசிங்
மாநில ஒருங்கிணைப்பாளர் .

Leave a comment